புதுதில்லி, டிச.14- இந்தியாவின் சில்லரை விலைப் பண வீக்கம் தொடர்ந்து 4-ஆவது மாதமாக உயர்ந்துள்ளது. அது 2021 நவம்பரில் 4.91 சத விகிதத்தைத் தொட்டுள்ளதாக, தேசிய புள்ளி யியல் அலுவலகம் (National Statistical Office - NSO) தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் (Consumer Price Index) கணக்கிடப்படும் சில்ல ரைப் பணவீக்கமானது, கடந்த 2021 ஆகஸ்டில் 4.35 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 4.35 சதவிகி தமாகவும், அக்டோபரில் 4.48 சதவிகிதமாகவும் இருந்தது. நவம்பரில் இது 4.91 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதன் விலையைப் பெரிய அளவில் அதிகரித்துள் ளது. பழம், காய்கறி மீதான பணவீக்கம் அதி கரித்து சில்லரை பணவீக்கத்தின் அளவு, கடந்த 4 மாதங்களில் இல்லாத உயர்வையும் எட்டி யுள்ளது. 2021-22 நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவிகி தம் வரை உயரலாம் எனவும், 2022-23 நிதி யாண்டில் இது 5 சதவிகிதமாக இருக்கும் என வும் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மதிப்பிட்டி ருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் சில்லரைப் பணவீக்கம் 5.1 சதவிகி தமாகவும், 4-ஆவது காலாண்டில் 5.7 சதவிகி தமாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், நிர்ணயித்த 5.1 சதவிகிதம் என்ப தைக் காட்டிலும் குறைவாக 4.91 சதவிகித மாகவே பணவீக்கம் உள்ளது. இதற்கு நவம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 16 சதவிகி தம் வரை குறைந்து 76 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது சாதகமாக அமைந்துள்ளது.