states

நவம்பர் 26-இல் ஆளுநர் மாளிகைகள் நோக்கி பேரணி

புதுதில்லி, அக்.26- வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் வரும் நவம்பர் 26 அன்று ஆளுநர் மாளிகைகள் நோக்கிப் பேரணி நடத்திட, சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல் விடுத்துள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒருங் கிணைப்புக்குழு மற்றும் வரைவுக் குழுக்களின் சார்பில் இணைய வழி  கூட்டம் செவ்வாய் அன்று நடை பெற்றது. கூட்டத்தில் வரலாறு படைத் திட்ட விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டை அனுசரித்திடும் விதத்தில், வரும் நவம்பர் 26 அன்று ஆளுநர் மாளிகைகள் நோக்கி மாபெரும் விவசாயிகள் பேரணியை நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி கள் சங்கங்களின் தலைவர்கள் ஆளு நர் மாளிகைகள் நோக்கிப் பேரணிக் கான தயாரிப்பு வேலைகள் பல மாநி லங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்ட தாகத் தெரிவித்தார்கள். ஆளுநர் மாளிகைகள் நோக்கிய பேரணியின் இறுதி வடிவம் மற்றும் ஆளுநர்களிடம் அளிக்க வேண்டிய மனுக்களை இறுதிப்படுத்துவதற்காக வரும் நவம்பர் 14 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கூட்டத்தைத் தில்லியில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பிர்சா முண்டா பிறந்த நாள் நிகழ்வுகளுக்கு ஒருமைப்பாடு

நவம்பர் 14 அன்று நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் வரைவுக்குழு உறுப்பினர் கள் மத்தியில் விவாதம் மேற்கொள்ளப் பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து இறுதிப்படுத்தப்படும். வனப் பாதுகாப்புச்சட்டம் மற்றும் விதிகளில் ஒன்றிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள திருத்தங்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா கண்டனம் தெரிவித்தது. பழங்குடியினர் உரிமை களுக்காகப் போராடிய தியாகி பிர்சா முண்டா பிறந்த நாளான நவம்பர் 15 அன்று பழங்குடியின அமைப்புகள் நடத்திடும் நிகழ்வுகளுக்கு ஒருமைப் பாட்டை சம்யுக்த கிசான் மோர்ச்சா விரிவுபடுத்திக் கொள்வதென்றும் தீர்மானித்தது.   380 நாட்கள் நடைபெற்ற விவசாயி கள் போராட்டத்தின்போது மிகப்பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பரம்ஜித் சிங் மறைவுக்கு கூட்டம் அஞ்சலி செலுத்தியது. இக்கூட்டத்தில் ஹன்னன்முல்லா, டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் தர்சன்  பால், யுத்விர் சிங், மேதா பட்கர், ராஜா ராம் சிங், அதுல் குமார் அஞ்சான், சத்ய வான், அவிக் சஹா, சுக்தேவ் சிங், ரமிந்தர் சிங், விகாஷ் ஷிஷீர் மற்றும் டாக்டர் சுனிலம் முதலானவர்கள் பங்கேற்றார்கள்.     (ந.நி.)