பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்க அம்மாநில அரசு தீவிரமாக களமி றங்கியுள்ளது. முன்பு மாநிலத்தின் தலை நகர் மண்டலமான ஜெய்ப்பூரில் அறி விப்பின்றி மறை முகமாக கட்டுப் பாடு என்ற பெயரில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் மாட்டி றைச்சிக்கு தடைவிதிக்க பாஜக அரசு அடுத்தகட்ட வேலையை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக கைர்தால் மாவட்டத் தின் திசாராவில் பசுவதை மற்றும் திறந்த வெளியில் மாட்டிறைச்சியை விற்றதாகக் கூறி, 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி யில் சுற்றித் திரிந்த 12 மாடுகளைப் பிடித்து பசுக்காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்த நிலையில், திசாராவில் மாட்டி றைச்சி விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத 4 காவலர்களை இடைநீக்கம் செய் துள்ளது ராஜஸ்தான் பாஜக அரசு.