states

img

ரஹ்மானின் 30 வருடம் இசைப்பயணம்: ஏ.ஆர்.ஆர்.திரைப்பட விழா அறிவிப்பு

சென்னை, ஆக.4- இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக ஏஆர்ஆர் திரைப்பட விழா ஆகஸ்ட் 4 அன்று துவங்கி,ஆக.9 வரை சென்னை மற்றும் கோவையில் நடைபெற உள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன் முதல்  படத்திலேயே இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அற்புத இசை  கலைஞர் ஆவார். கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய் என தொடர்ந்த அவரது இசைப்  பயணம் 30 ஆண்டுகளை கடந்து இன்றைய ‘மாமன்னன்’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் தமிழ் மட்டுமின்றி இந்தி,  மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத் துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக 2  ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியா வுக்கு பெருமை தேடி தந்துள்ளார். இது தவிர கோல்டன் குளோப், பாஃப்டா , பல்வேறு படங்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ள  இவர் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதைக் கொண்டாடும் விதமாக, ஏ.ஆர்.ரஹ்மான் 5 வருட இடை வெளிக்குப் பிறகு சென்னையில் மெகா  நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த திருவிழாவின் ஒரு பகுதி யாக ஆக. 4 அன்று துவங்கி ஆக, 9 வரை  ஏஆர்ஆர் திரைப்பட விழா என்ற நிகழ்ச்சியையும் சென்னை மற்றும் கோவையில் நடத்த உள்ளனர். இதில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான  20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்த பதிவில்  “30 ஆண்டுகால அன்பைக் கொண்டாடு கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும், அருகிலும் தொலைவிலும் நான் பெற்ற  அபாரமான அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி கூறுகிறேன். இந்தப் பயணம் முழுவதும் உங்கள் கருணையும், அரவணைப்பும் என் இதயத்தைத் தொட்டது. இன்னும் பல வருட நேசத்துக்குரிய நினைவுகள் இதோ ” என அவர் குறிப்பிட்டிருந்தார்.