புதுதில்லி, மே 11- தில்லியில் இந்து அமைப்பினரால், குதுப்மினார் முன் அனுமன் மந்திரம் ஓதப்பட்டது. மேலும் இதன் பெயரை ‘‘விஷ்ணு மினார்’’ என மாற்றவும் வலியுறுத்தினர். தில்லியின் மெஹரோலி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் குதுப்மினார். இது கில்ஜி வம்சத்தின் முதல் மன்னர் குத்புதீன் ஐபக்-ஆல், 1198-ஆம் ஆண்டில் தொடங்கி கட்டி முடிக்கப்பட்டது. இது தற்போது ஒன்றிய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின ரிடம் உள்ளது. மேலும் சர்வதேச சுற்று லாத் தலமாகவும் உள்ளது. குதுப்மினா ரை சமீப காலமாக இந்துத்துவா அமைப்பினர் குறி வைத்துள்ளனர். இந்தவகையில், குதுப்மினாரின் முன்பு செவ்வாயன்று ‘மஹா கால் மானவ் சேவா’ எனும் இந்து அமைப்பி னர் தலைவரான ஜெய் பகவான் கோயல் எனும் துறவி தலைமையில் கூடினர். ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷ மிட்டபடி இவர்கள், குதுப்மினார் வளாகத்தில் நுழைந்து, அதன் வாயிலின் முன்பு அமர்ந்து அனுமன் மந்திரம் ஓதத் தொடங்கினர். அப்போது பேசிய ஜெய் பகவான் கோயல், ‘‘ஜெயின் மற்றும் இந்து கோயில்களை இடித்து சனாதன தர்மத்தினர் நிலத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், குதுப்மினாரின் பெயரை ‘விஷ்ணு மினார்’ என மாற்ற வேண்டும். தில்லியில் முஸ்லிம் பெயரை தாங்கி யுள்ள பகுதிகளின் பெயர்களையும் இந்துகளின் பெயர்களால் மாற்ற வேண்டும். அதுவரையும் எங்கள் போராட்டம் தொடரும்’’ என தனது நஞ்சை கக்கினார்.
இதுகுறித்து அறிந்த தில்லி காவல்துறையினர் விரைந்து வந்து இந்து அமைப்பினரின் சிலரை விசா ரணைக்காகக் காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். இவர்களில் ஜெய் பகவான் கோயல் மீது மட்டும் வழக்குப் பதிவாகி விசாரணை தொடர்கிறது. இதுபோல், குதுப்மினாரில் இந்து அமைப்புகள் சர்ச்சைகளை கிளப்பு வது அதிகரித்துவிட்டது. குதுப்மினா ரின் நுழைவு வாயிலில் ‘குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி)’ எனும் பெயரிலான மசூதி அமைந்துள்ளது. முஸ்லிம்களால் தொழுகை தொடரும் இந்த மசூதியானது 27 இந்து கோயில் களை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் தில்லி பாஜக வின் சில தலைவர்களும் இணைந்து விட்டனர். மெஹரோலி நகராட்சி வார்டின் பாஜக உறுப்பினரான ஆர்த்தி சிங், குதுப்மினாரினுள் இந்து கடவுள் சிலைகள் அவமதிக்கும் வகையில் தரை களில் வைக்கப்பட்டுள்ளன எனவும், இவற்றை மாற்றி உகந்த இடத்தில் வைத்து, பூசை வழிபாட்டிற்கு அனுமதி க்கவும் வலியுறுத்தி இருந்தார். கடந்த டிசம்பர் 2020 இல், இந்து மடத்தீர்த்தங்கர் ரிஷப் தேவ் எனும் துறவியால், தில்லியின் சிவில் நீதி மன்றத்தில் குதுப்மினார் மீது ஒரு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, ஒன்றிய அரசின் 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக் காட்டி நீதிபதி நேஹா சர்மா தள்ளுபடி செய்தார்.