states

பஞ்சாப்: ஒரு பெண் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

சண்டிகர்,மார்ச் 19- பஞ்சாப் அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக மார்ச் 19 அன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான், விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலான் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை மார்ச் 19 அன்று  பதவியேற்றுக் கொண்டது.  இதன்படி, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பிரம்ம சங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ்,  லால் சந்த் கடாருசக், குர்மித் சிங் மீத் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லார், ஹர்பால் சிங் சீமா, டாக்டர் பல்ஜீத் கவுர், ஹர்பஜன் சிங் ஈ.டி.ஓ., டாக்டர் விஜய் சிங்லா ஆகியோரும் அமைச்சர்களாக  பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர்  பன்வாரி லால் புரோகித் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.