2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறு வதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திடீரென இந்தியா- பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் நடந்தது. புல்வாமாவில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் தீவிர வாத அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஜம்மு- காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். அந்த சம்பவத்தில் நடந்த தவறு களை பேசாமல் இருக்கும்படி தன்னிடம் மோடி கேட்டுக் கொண்டதாக கரண் தாப்பரின் பேட்டியில் சத்யபால் மாலிக் தெரிவித்தார். இவ்வளவு பெரிய எண்ணிக்கை யில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாக னங்கள் செல்வதில்லை என்பதால் ,அமித் ஷாவின் உள்துறை அமைச்சகத்திடம் விமானம் அனுப்பக் கோரியதாக அவர் தெரிவித்தார். சத்யபால் மாலிக், மோடியிடம் “இது நமது தவ றால் நடந்தது” என்று சொன்னதற்கு இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு மோடி கேட்டுக் கொண்ட தாக அவர் அம்பலப்படுத்தினார்.