states

புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு மருந்து கொள்முதலில் ஊழல்

புதுச்சேரி,செப்.11- தரமற்ற மருந்து கொள்முதல் செய்துள்ள  வழக்கில் அனைவரை யும் கைது செய்து விசாரிக்க வேண் டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி  மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்கள்,  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும் சத்து மருந்துகள் தொடர்ந்து  தரமற்றதாகவும், காலாவதியான தாகவும் இருப்பது தெரியவந் துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு  வில்லியனூர் ஆரம்ப  சுகாதார நிலை யத்தில் தரமற்ற காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது அம்பலமானது. இதை துணை நிலை  ஆளுநர் ஆய்வு என்ற போர்வை யில் உண்மை நிலையை மூடி மறைத்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு புதுச்சேரி சுகாதாரத் துறையில் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம்  மூலம்  வழங்கப்பட்ட சத்து மாத்திரை களை சாப்பிட்ட கர்ப்பிணிகள் மற்றும்  குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அனைத்து மருந்து களும் திரும்ப பெறப்பட்டது. விசார ணையில் தரமற்ற மருந்துகள் கொள் முதல் செய்யப்பட்டது தெரிய வந்தது.   தேசிய கிராமப்புற சுகாதார  திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுனராக பணியாற்றிய நடராஜன் அவரது மனைவி பத்மா பெயரில் பத்மஜோதி எண்டர் பிரை சஸ், நண்பர் பெயரில் சாய்ராம் ஏஜென்சி என்ற கம்பெனிகளை உருவாக்கி உள்ளனர். இந்த நிறுவனத்திலிருந்து மருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 44  லட்சம் முறைகேடு நடந்தது தொடர் பாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக  அரசும், சுகாதாரத்துறையும் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தரமற்ற மருந்துகளை கொள்முதல்  செய்துள்ளது என்ற குற்றச்சாட்டின்  படி வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கினை காலம்  தாழ்த்தி  பதிவு செய்யப்பட்டிருப்பது, கடைநிலை ஊழியரை மட்டும் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதும் உயர்மட்ட ஊழலை மூடி மறைக் கும் செயலாகும்.

மருந்து கொள்முதலில் நடை பெற்று வரும் ஊழலும், லஞ்சமும் அதன் காரணமாக புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் இந்த செயல் தனியார் மருத்துவமனைகள், மற்றும் கிளீனிக்குகளை மக்கள் நாடி செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.  அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து கள் கொள்முதல் செய்யப்படுவது வெளிப்படைத் தன்மையோடு நடை பெறுவதில்லை என்றும், கொள் முதல் செய்யப்பட்ட மருந்து களின் தரச் சான்று பெறாமலேயே  நோயாளிகளுக்கு வழங்கப்படுவ தும், நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும், இதில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும்  சுகாதாரத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணியாற்ற கூடிய டாக்டர்களுக்கு மாத ஊதியம் 50  ஆயிரமும், அதிகாரிகளுக்கு உடந்தையாக உள்ள சில ஒப்பந்த டாக்டர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. அரசு  மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியர் முதல் சிறப்பு மருத்துவர்  வரை ஏராளமான காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கு எந்த அக்கறையும் ஆளும் அரசுக்கு இல்லை. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் கட்டிடங் கள், ஆய்வகங்கள், மருத்துவக் கருவிகள் பழுதாகியும், வேலை  செய்யாமலும் முடங்கி கிடக்கின்றன.  மருத்துவமனைக்கு பல்வேறு விதங்களில் கொள்முதல் செய்யப் படும் மருந்து முதல் அனைத்து பொருட்களிலும் ஊழலும் முறை கேடுகளும் அதிகரித்துள்ளது. எனவே புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இனிமேலாவது மக்கள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும். போலியான மருந்து கொள்முதல் வழக்கில் தொடர்புடைய அனை வரையும் கைது செய்ய வேண்டும்.  பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி பணி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண் டும், ஒப்பந்த முறை டாக்டர்களை நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  அச்செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.