புதுதில்லி, நவ.28- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா பதவி யேற்கவுள்ளார். தலைவர் பதவிக் கான தேர்தலில் உஷாவுக்கு எதிர்ப்பு இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஞாயிறன்று வரை பி.டி.உஷா மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும். பி.டி.உஷா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கான போட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய கூட்டமைப்புகளின் ஆதரவுடன் நடப்பதாக அண்மையில் பி.டி.உஷா கூறியிருந்தார்.