states

img

காவித்துண்டுக்கு எதிராக நீலத்துண்டுடன் களமிறங்கிய தலித் மாணவர்கள்!

சிக்மகளூர், பிப்.8- கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரி களில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ எனும் முகத்திரை அணிந்து வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மக ளிர் பி.யூ. கல்லூரியில்தான் கடந்த டிசம்பர் மாதம் இந்தப் பிரச்சனை துவங்கியது. ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறை யில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பதிலுக்கு, இஸ்லாமிய மாணவி கள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங் கள் காவித்துண்டு அணிவோம் என்று இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிப் போராட்டத் தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடப்பதால், அதை சாதகமாக வும் அவர்கள் பயன்படுத்திக் கொண்ட னர். அவர்களின் மிரட்டலால், உடுப்பி கல்லூரியைத் தொடர்ந்து, குந்தாப் பூர் ஜூனியர் கல்லூரி, பந்தர்கர் கல்லூரி ஆகியவற்றிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது.

இது தற்போது பிரச்சனையைப் பெரிதாக்கியுள்ளது. இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது, அவர்களது மத சம்பிரதா யம் ஆகும். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீ ரென ஹிஜாப்பிற்குத் தடை விதிப்பது அநீதி என்று கண்டனக் குரல்கள் எழுந் தன. அதேநேரத்தில், இந்துத்துவா ஆத ரவு மாணவர்களும், காவித்துண்டு அணிந்து, ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு போட்டிப் போராட்டத்தை தொடர்ந்த னர். இந்நிலையில்தான், இஸ்லாமிய மாணவியர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில், நீலத்துண்டு அணிந்து, தலித் மாணவர்கள் களமிறங்கியுள்ள னர். சிக்மகளூரில் உள்ள ஐடிஎஸ்ஜி கல்லூரியில் படித்து வரும் இந்துத் துவா ஆதரவு மாணவர்கள், காவித் துண்டு அணிந்தும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதே, தலித் மாணவர்கள், நீலத் துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’ என்றும் ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் உரிமை. அதில் தலையிட இந்துத்துவா கூட்டத்திற்கு உரிமையில்லை என்றும் முழக்கமிட்டு ஊர்வலம் சென்றனர். ஒருகட்டத்தில், இந்துத்துவா ஆதரவு மாணவர்களும், தலித் மாணவர்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர். ஆசிரி யர்கள் தலையிட்டு அவர்களை கலைந்துபோகச் செய்தனர். இது கர்நாடக மாநில கல்லூரிகளில் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.