states

img

பிரியங்கா கணவர் பக்கம் திரும்பிய வருமான வரித்துறை!

காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவரு மான ராபர்ட் வதேரா, ராஜஸ்தானில் கடந்த 11 ஆண்டுகளாக பினாமி நிலத்தின் மூலம் ஈட்டிய ரூ. 106 கோடி வருமானத்தை மறைத்துள்ள தாக வருமான வரித்துறை குற்றம் சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வதேராவை தொடர்பு கொண்டு பேசியபோது, “பல ஆண்டு களாக இதே காரணத்தை சொல்கின்ற னர். தற்போது, எனது பெயரை வெளியிட சரியான (தேர்தல்) நேரமாக அவர்களுக்கு அமைந்துள்ளது. இது, ஒரு தெளிவான தீங்கிழைக்கும் அரசியல் வேட்டையா கும்” என்று வதேரா பதிலளித்துள்ளார்.