புதுதில்லி, மே 16 - ஒன்றிய அரசு, விவசாயிகளிடம் போது மான அளவு கோதுமையை கொள்முதல் செய்யாததே கோதுமை மற்றும் கோதுமை மாவுகளின் விலை உயர்வுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசின் வெளிநாட்டு பொது வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade - DGFT) கடந்த வெள்ளிக்கிழமையன்று தடை விதித்தது. உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை, 12 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு உயர்வைச் சந்தித்த நிலையில், இந்த தடையைப் பிறப்பித்தது.
மே 13-ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் (Irrevocable Letter Of Credit - ILOC) நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றின்படியான ஏற்றுமதிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கூறிய ஒன்றிய அரசு, இந்தியாவில் கோதுமையை இருப்பு வைப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. இதனிடையே, உள்நாட்டின் தேவையைச் சமாளிக்க இந்தத் தடை அவசியமானதுதான் என்றாலும், ஒன்றிய அரசின் அலட்சியமே இப்படி யொரு நிலைமை ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. “ஒன்றிய அரசு போதுமான அளவு கோது மையை கொள்முதல் செய்யத் தவறியதே, தற்போதைய கோதுமை விலை உயர்வுக்கு காரணம் என்று நினைக்கிறேன். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவ சியம் ஏற்பட்டிருக்காது. தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு தடை செய்வது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்திருக்கிறது. ஏற்றுமதி காரணமாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அதிகபட்ச பலன்களை ஒன்றிய அரசு கிடைக்காமல் செய்துவிட்டது” என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியிருந்தார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமக்கு ஆச்சரி யம் அளிக்கவில்லை என்றும் இந்த அரசு விவசாயிகளிடம் எப்போதுதான் நட்போடு இரு ந்தது? என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார். இந்நிலையில், கோதுமை கொள்முதல் பணிகள் முடிவடைவதாக இருந்த 6 மாநிலங் களில், அப்பணியை மே 31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள் ளது.
ராஜஸ்தானில் மே 10-ஆம் தேதியும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மே 15-ஆம் தேதியும் கோதுமை கொள்முதலை முடித்துக் கொள்வதென அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தற்போது நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் அரசின் கோதுமை கொள்முதல் சரிபாதியாக குறைந்து விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டின் கோதுமைக் கொள்முதல் காலத்தில் 36.7 மில்லியன் டன்கள் என்ற அளவிற்கு ஒன்றிய அரசு விவசாயி களிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்திருந்தது. ஆனால், நடப்பு 2022-23 நிதியாண்டின் மே 14-ஆம் தேதி வரை யிலான கொள்முதல் காலத்தில் வெறும் 18 மில்லியன் டன்கள் அளவிற்கே கோதுமையை கொள்முதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு, அரசாங்கம் வழங்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையைவிட சந்தை விலைகள் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் அரசே கூறியுள்ளது. வெளிச்சந்தையில் விலை அதிக மாக இருப்பதால், விவசாயிகள் தங்களின் கோதுமையை தனியார் வர்த்தகர்களுக்கே விற்பனை செய்து வருகின்றனர். இதுவே நடப்பாண்டு அரசாங்கத்தின் கோதுமை கொள்முதல் குறைந்ததற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய கோதுமைத் தேவையை உணர்ந்த வர்த்தகர்கள், சற்று அதிகவிலை கொடுத்து கோதுமையை செய்தனர். அவற்றை ஏற்றுமதி செய்தும் கொள்ளை லாபம் பார்த்தனர். ஆனால், இன்று தனியார் லாபம் அடைய, நாடு முழுவதும் மக்கள் கோதுமை விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாம் நடந்து முடிந்த பிறகு, ஏற்று மதிக்குத் தடை என்றும், அரசின் கோதுமைக் கொள்முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் நம்புவதாகவும் ஒன்றிய அரசு தற்போது பாசாங்கு காட்டியுள்ளது. மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோதுமை கொள்முதல் தற்போது சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு ஜி7 நாடுகள் கண்டனம்!
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை உத்தரவுக்கு ‘ஜி7 நாடுகள்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிரச்சனைக்கு மத்தியில் இந்தியா இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது” என்று கூறியுள்ள ‘ஜி7 நாடுகள்’ கூட்டமைப்பின் விவ சாயத்துறை அமைச்சர்கள், “ஒவ்வொரு நாடும் இதேபோல ஏற்றுமதியை நிறுத்தினால் உலகச் சந்தை ஸ்தம்பித்துவிடும்” என்று எச்சரித்துள்ள னர். “இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது போன்று ஒவ்வொரு நாடுகளும் ஏற்று மதியை நிறுத்தினால் மார்க்கெட் நிலைமை மிகவும் மோசமாகும். இது கூடுதல் நெருக்கடி யை ஏற்படுத்தும்’’ என்று ஜெர்மனி விவ சாயத்துறை அமைச்சர் செம் ஒஸ்டமிர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம், ஜெர்மனியில் நடைபெறும் ‘ஜி7 நாடுகளின்’ மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை முக்கிய விவாத மாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.