states

img

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் காணொலி மூலம் பிரதமர் திறப்பு

புதுதில்லி,ஜன.12- தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை ஜனவரி 12  புதனன்று தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, இராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர்  சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ. 24 கோடி மதிப்பில் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  மின்னணு நூலகம் உள்ளி ட்ட 12 பிரிவுகளுடன் கூடிய பிரம்மா ண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரதமர் பேசுகையில், தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும். அமெரிக்காவில் உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழில்  சில நிமிடங்கள் பேச வாய்ப்பு  கிடைத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது. நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன; 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.

நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சத வீதம் அதிகரித்துள்ளன. ஏற்கனவே 8 ஆயிரம் மக்கள் மருத்துவ மையங் கள் நாட்டில் உள்ளன. ஒரு மாநி லத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது இதுவே முதல் முறை.  உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகை யில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் வக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 317 ஆக இருந்த மருத்துவக்கல்லூரி களின் எண்ணிக்கை தற்போது 597 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை கள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா தொற்றுஉணர்த்தி யுள்ளது. ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருந்துகளுக் கான செலவுதொகை குறைந்துள்ளது.  மருத்துவக்கல்லூரி திறப்பில் என்னு டைய சாதனைகளை நானே முறி யடித்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். சென்னையில் திறப்புவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஒன்றிய இணை அமைச்சர்  எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.