states

img

மூவண்ண தேசியக் கொடியின் இடத்தை காவிக்கொடி பிடிக்கும்!

மங்களுரூ, மார்ச் 21- இந்துக்கள் ஒன்றிணைந்தால், ‘பக வத் துவாஜ்’ (காவிக் கொடி) நாட்டின் தேசிய கொடியாக மாறும் என ஆர்எஸ்எஸ் தலைவர்களுள் ஒருவ ரான கல்லாட்கா பிரபாகர் பட் பேசி யுள்ளார். “என்றாவது ஒருநாள் காவிக் கொடி, இந்த நாட்டின் தேசியக்கொடி யாக மாறும்” என்று கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, கடந்த மாதம் பேசியிருந்தார். இது நாடு முழு வதும் கண்டனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட்-டும், “காவிக் கொடி தேசியக்கொடியாகும்” என்று பேசியுள்ளார்.  “என்றாவது ஒருநாள் காவிக் கொடி நமது தேசியக் கொடியாக மாற லாம். இந்துக்கள் அனைவரும் ஒன்றி ணைந்தால் இது நடக்கும். நடக்க வேண் டும். தற்போது இருக்கும் மூவர்ணக் கொடிக்கு முந்தையக் கொடி எது. பிரிட்டிஷாரின் கொடி இருந்தது. நமது நாட்டின் கொடியாக பச்சை வர்ண நட்சத்திரமும் சந்திரனும் இருந்தது. நாடாளுமன்றத்திலும், மாநிலங்க ளவையிலும் பெரும்பான்மையான எம்.பி.க்கள் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று வாக்களித் தால், தேசியக் கொடியை மாற்றலாம். சிறுபான்மையினரை திருப்திப்படுத்த இறுதி செய்யப்பட்டதாக கூறும் தேசி யக் கொடியை நான் மதிக்கிறேன். இதே போலதான் வந்தே மாதரம் நிராகரிக் கப்பட்ட பின்னரே தேசிய கீதம் அங்கீக ரிக்கப்பட்டது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதி ராக, முஸ்லிம் வியாபாரிகள் கடைய டைப்பு நடத்தியிருப்பது வகுப்புவாத மோதலைத் தூண்டும் செயல், இது தேசத்துரோகத்திற்கு சமம். இவ்வாறு கல்லாட்கா பிரபாகர் பட்  பேசியுள்ளார்.