states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய ரயில்வேத் துறையை தனது பிரச்சாரத்துறையாக பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். இந்திய வரலாற்றில் இப்படியெல்லாம் நடந்தது இல்லை. மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு துறையும் முழுக்க முழுக்க அவரது பிரச்சாரத் துறையாக மாற்றப்பட்டுள்ளது.  ஆயுதப் படைகள் உட்பட இதற்கு தப்பவில்லை. தற்போது இந்த துறைகள் அனைத்தும் மோடிக்காக, அவரது கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இறக்கிவிடப்பட்டுள்ளன. இத்துறைகளின் விளம்பரங்கள் வாயிலாக, செயல்பாடுகள் வாயிலாக, வெளியீடுகள் வாயிலாக இந்தப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.  இது முற்றிலும் கடும் கண்டனத்திற்குரியது. இது, அரசு எந்திரத்தை முழுக்க முழுக்க துஷ்பிரயோகம் செய்யும் செயல். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.