புதுதில்லி, மே 13 - இந்தியாவில் விலைவாசி உயர்வானது, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், தக்காளி, உருளைக் கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறி கள், ஆப்பிள், பப்பாளி உள்ளிட்ட பழங்கள், சமையல் எண்ணெய் வகை கள், அயோடைஸ் உப்பு, இறைச்சி, ஆடைகள், காலணி, போக்குவரத்து, தகவல் தொடர்பு செலவினங்கள் என அனைத்தின் சில்லரை விலைகளும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்திற்குச் சென்றுள்ளன. நுகர்வோர் பணவீக்க விகிதம் (Consumer Price Inflation) எனப்படும் சில்லரைப் பணவீக்கம் தொடர்பான அறிக்கையை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வியாழனன்று வெளியிட்டது. அதில், இதுதொடர் பான புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன்படி, விலைவாசியுடன் தொடர்புடைய சில்லரைப் பணவீக்க விகிதம், கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்தது, ஏப்ரலில் 0.84 சதவிகிதம் அதிகரித்து, 7.79 சத விகிதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல் லாத பணவீக்க அதிகரிப்பு ஆகும். இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் சில்லரைப் பணவீக்க அளவு 8.33 சதவிகிதத்தை எட்டி யதே அதிகபட்ச அளவாக கருதப் பட்டு வந்தது. தற்போது, 8 ஆண்டு களுக்குப் பிறகு பணவீக்க விகிதம் அதிகபட்ச அளவாக 7.79 சத விகிதத்தை தொட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் பணவீக்கம் 4.23 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், ஓராண்டில் மட்டும் 3.56 சதவிகிதம் சில்லரைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தனித்தனியாக எடுத்துக் கொண்டால், உணவுப் பொருட்களுக் கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவிகிதமாக இருந்த நிலையில், அது ஏப்ரலில் 8.38 சதவிகிதமாகவும், எரிபொருட்களுக்கான பணவீக்கம் 7.52 சதவிகிதத்திலிருந்து 10.80 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. அதாவது, உணவு மற்றும் அருந்தும் பானங்களுக்கான விலை வாசி மார்ச் மாதத்தில் 7.47 சதவிகி தமாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 8.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளுக்கான பணவீக்கம், மார்ச் மாதத்தில் 11.6 சதவிகி தத்திலிருந்து 15.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதேபோல எண்ணெய் மற்றும் கொழுப்புகளின் விலைவாசியும் 17.3 சதவிகிதத்தில் இருந்து 18.8 சதவிகிதமாகவும், இறைச்சி மற்றும் மீன் விலைவாசி 7 சதவிகிதத்திலிருந்து 9.63 சதவிகித மாகவும் உயர்ந்துள்ளது.
மார்ச் மாதத்தில் வெறும் 8 சத விகிதமாக இருந்த போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கான விலைவாசி ஏப்ரல் மாதத்தில் 11 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.அதேபோல மார்ச் மாதத்தில், 9.4 சதவிகிதமாக இருந்த குடும்பங் களின் ஆடை மற்றும் காலணி களுக்கான செலவினம், ஏப்ரல் மாதத்தில் 9.85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் காலணி விலைகள் 12.12 சத விகிதமும், ஆடைகளின் விலைகள் 9.51 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. மாநிலங்கள் அளவில், மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை தேசிய சராசரியை விட அதிக பணவீக்க விகிதத்தை (9.1 சத விகிதம்) பதிவு செய்துள்ளன. தெலுங் கானா மற்றும் ஹரியானா ஆகிய வையும் தொடர்ந்து 9 சதவிகித பண வீக்கத்தைப் பதிவு செய்துள்ளன.
இதற்கு மாறாக, நாட்டிலேயே கேரளா (5.08 சதவிகிதம்) மற்றும் தமிழ்நாடு (5.37 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த பணவீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. “இந்தியாவின் பணவீக்க அனுபவம் பல முன்னேறிய நாடு களைப் போல மோசமாக இல்லை. மேலும் விலைவாசி உயர்வானது, நாட்டில் அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விட, குறைந்த வரு மானம் உள்ள குடும்பங்கள் மீது குறைவான தாக்கத்தையே ஏற் படுத்தியுள்ளன” என்று ஒன்றிய நிதித் துறை அமைச்சகம் ஏப்ரல் மாதத் திற்கான அதன் மாதாந்திர பொரு ளாதார மதிப்பாய்வில் வாதிட்டு இருந்தது.
ஆனால், ஏப்ரலில் கிராமப்புறப் பணவீக்கம் மிகமோசமான வகையில் 8.4 சதவிகிதமாகவும், நகர்ப்புறப் பணவீக்கம் 7.1 சதவிகிதத்தையும் எட்டியிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசா்வ் வங்கியானது, அடிப்படைக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை கடந்த வாரம் 40 அடிப்படைப் புள்ளிகள் (0.4 சதவிகிதம்) அதிகரித்து 4.40 சதவிகிதமாக நிர்ணயித்தது. தற்போது தொடர்ந்து நான்கா வது மாதமாக ஏப்ரல் மாத புள்ளிவிவ ரத்திலும் சில்லரைப் பணவீக்கம் ரிசா்வ் வங்கியின் வரம்பான 6 சத விகிதத்தை தாண்டியுள்ளதால், ரிசா்வ் வங்கி தனது ஜூன் மாதம் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி விகி தங்களை உயா்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரி விக்கின்றனர். மே மாதத்தில், பணவீக்க விகிதம் குறையும் என்று சந்தை மதிப்பீட்டு நிறுவனமான ‘இக்ரா’ (ICRA) தெரிவித்திருந்தாலும், நிச்சய மாக 6.5 சதவிகிதத்திற்கு மேலாகவே பணவீக்கம் இருக்கும் என்றும் அது அச்சத்தை அளித்துள்ளது.