states

img

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெல்வது கஷ்டம்!

நாக்பூர், மார்ச் 3- விவசாயிகளின் கோபம் காரணமாக, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக வெற்றி பெறுவது கஷ்டம் என்று விஸ்வ ஹிந்து பரிசத் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா கணித் துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் பிரவீன் தொகாடியா இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “விவசாயிகள், தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறைந்த பட்ச ஆதரவு தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இரண்டையும் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவ சாயிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி, கோபம் காரணமாக இந்த முறை உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெல்வது கஷ்டம். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியிலேயே தெளி வாக தெரியவந்து விட்டது. அப்போதே இந்திய மாணவா்களை மீட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் களை மீட்பதில் ஏற்பட்ட தாமதம்தான் ஒரு மாணவரின் உயிரிழப்புக்கு காரண மாக அமைந்து விட்டது.  இந்தியாவில் அரசு மருத்துவக் கல் லூரிகளில் வெறும் 45 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் அதிகப்படி யான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத னால்தான் இந்திய மாணவா்கள் வெளி நாடு சென்று மருத்துவம் படிக்க நேரிடு கிறது.” இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறி யுள்ளார்.