சண்டிகர், பிப்.7- “அதிகாரங்கள் மொத்தத்தையும் தன்னி டம் குவிக்கும் மோடி அரசின் போக்கு நாட்டை பலவீனப்படுத்தும்” என்றும், “இதற்கு எதிராக மாநிலக் கட்சிகள் இணைய வேண்டும்” என்றும் பாஜகவுடன் நீண்டகால கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் நிறுவனரும், ஐந்து முறை பஞ்சாப் முதல்வராக இருந்தவருமான பிரகாஷ் சிங் பாதல் (94) கூறியுள்ளார். பஞ்சாப் சட்டப்பேவைத் தேர்தல் பணிகளில் இருக்கும் பிரகாஷ் சிங் பாதல், தனது பிரச்சாரத்திற்கு இடையே பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு கட்சியாக, பஞ்சாப்பில் எந்த ‘சங்கட்’ (சிக்கல்) ஏற்பட்டாலும், அது எமர்ஜென்சி அல்லது அதன் உரிமைகளுக்கான போராட்டம் என எதுவாக இருந்தாலும், அகாலிதளம் எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. நானே 15 ஆண்டுகள் சிறையில் இருந்தேன்.
விவ சாயிகளாக இருந்தாலும் சரி, தொழிலாளிகளாக இருந்தாலும் சரி, வியாபாரிகளாக இருந்தாலும் சரி, அமைதி மற்றும் மத நல்லி ணக்கத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்காக 1982 ஆம் ஆண்டு ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானத்தின் கீழ் பஞ்சாபிற்கு அதிக அதிகா ரங்களைப் கேட்டு, ‘தரம் யுத் மோர்ச்சா’ நடத்தப்பட்டது. ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து மூட்டுகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதைப் போல வலிமையான இந்தியா வேண்டு மானால், மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இதற்கா கவே அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இதற்கு எதிராக பிராந்திய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதிகாரங்களை ஒருமுகப்படுத்துதல் மிகவும் தீங்கு விளைவிக்கும். இது மக்களை எந்த முன்னேற்றத்தையும் அடைய அனுமதிக்காது. இவ்வாறு பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.