மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில், ஜி20 உச்சி மாநாடு மாற்று கொள்கைகள் குறித்த கருத்தரங்கமும், பயிற்சி யும் நடைபெற்றது. இந்த கருத்த ரங்கை நடக்க விடாமல் தடுக்க முயன்ற தில்லி காவல்துறையினர் செயல்பாடு கண்டனத்திற்குரியது. சுர்ஜித் பவன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியால் நிர்வகிக்கப்படு கிறது. இங்கு, கட்சிக் கல்வி மற்றும் கருத்தரங்கம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பல்வேறு சமூக அமைப்பு கள் வி20 (We20) என்ற தலைப்பின் கீழ், வரவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் எழுப்பப்படவுள்ள பிரச்சனைகள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தின. ஆனால் காவல்துறையினர், ‘கூட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி பெறவில்லை’ எனக் கூறி, இந்த கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க முயன்றுள்ளனர். இதுபோன்று தனியார் கட்டிடங்க ளில் நடக்கும் எந்தவொரு கூட் டத்திற்கும் காவல்துறை அனுமதி தேவை இல்லை.