பாட்னா, பிப்.14- 25 வயது மாணவி கடத்தப் பட்டதாகக் கூறப்படும் வழக் கில் பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி மீது பாட்னா போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள முற்போக்கு காலனியில் வசிப் பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ர வரி 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூ ரிக்குச் சென்றிருந்தார். மதி யம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால். அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் தொடர்பு கொண்டார். அப்போது ரிஷி மாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனிடையே, 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதில் 7304210830 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது. அந்த எண் ணைத் தொடர்பு கொண்ட போது, அதை பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரி எடுத்து பேசி யுள்ளார். மேலும், ரேகாவை மிரட்டியுள்ளார். கடத்தப்பட்ட பெண், தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாக வும், எஸ்பி அல்லது டிஎஸ்பி -யிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகா விடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.