states

‘மும்பை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் நார்வே, எகிப்தில் இருந்து வரவில்லை’

புதுதில்லி, பிப். 22 - மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் நார்வே அல்லது எகிப்தில் இருந்து வரவில்லை,  அவர்கள் இன்னும் உங்கள் நாட்டில்தான் சுதந்திர மாக சுற்றித் திரிகிறார்கள் என்று புகழ்பெற்ற  இந்திய கவிஞர் ஜாவேத் அக்தர் பாகிஸ்தானி யர்களிடம் நேருக்கு நேராக உரையாடியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு, பாராட்டையும் பெற்று வருகிறது.  புகழ்பெற்ற உருது கவிஞர் பைஸ் அகமது பைஸின் நினைவாக, பாகிஸ்தான் நாட்டில் லாகூர்  நகரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, புகழ்பெற்ற இந்திய  கவிஞரும், பாலிவுட் திரைப்பட பாடலாசிரியரு மான ஜாவேத் அக்தர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். அவரும் பாகிஸ்தா னிற்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், லாகூர் நிகழ்ச்சியில் பார்வை யாளர்களில் ஒருவர் ஜாவேத் அக்தரைப் பார்த்து, “நீங்கள் பாகிஸ்தானுக்கு பலமுறை  வந்துள்ளீர்கள், நீங்கள் திரும்பி செல்லும்போது,  உங்கள் (இந்திய) மக்களிடம் இவர்கள் (பாகிஸ்தானியர்கள்) நல்லவர்கள் என்று சொல்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.  

அதற்கு ஜாவேத் அக்தர், “ஒருவரை ஒருவர் குறைகூற வேண்டாம். அது பிரச்சனைகளைத் தீர்க்காது; மும்பை (2008 நவம்பர் 26) தாக்குதல்  எவ்வாறு நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம்.  அவர்கள் (பயங்கரவாதிகள்) நார்வேயி லிருந்தோ அல்லது எகிப்திலிருந்தோ வர வில்லை.  அவர்கள் இன்னும் உங்கள் நாட்டில்  (பாகிஸ்தானில்) சுதந்திரமாக சுற்றித் திரி கிறார்கள். இதற்கு எதிராக இந்தியர்கள் புகார் அளித்துள்ளனர்” என்று பதிலளித்துள்ளார். மேலும், “பாகிஸ்தானின் கலைஞர்களான நுஸ்ரத் பதே அலி கான் மற்றும் மெஹ்தி ஹசன் ஆகியோருக்கு இந்தியா பெரிய நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்த போதிலும், இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞரான லதா மங்கேஷ்கருக்கு பாகிஸ்தான் எந்த நிகழ்ச்சியையும் நடத்த வில்லை” என்பதையும் ஜாவேத் அக்தர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜாவேத் அக்தரின் இந்த உரையாடல், இந்தியாவில் பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டு, பாராட்டைப் பெற்று வருகிறது.  பாஜக-வை சேர்ந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும், லாகூரில் ஜாவேத் அக்தர் பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, நீங்கள் அவர்களின் சொந்த  இடத்தில் அவர்களை அடித்தீர்கள் என்று பாராட்டி யுள்ளார்.