states

img

இந்தியாவின் ‘பொம்மைத் தொழில்’ வெற்றி

புதுதில்லி, ஜூலை 31- மாதாந்திர ‘மன் கி பாத்’ உரையில் இந்த மாதம் பிர தமர் மோடி ‘பொம்மை’ சப்  ஜெக்ட்டை பிடித்துக் கொண்  டார். பொம்மை ஏற்றுமதி ரூ. 300-400 கோடியிலிருந்து ரூ. 2,600 கோடியாக உயர்ந்துள் ளது.ரூ.3,000 கோடி மதிப்பி லான பொம்மைகள் இறக்கு மதி செய்யப்பட்ட நிலையில், அது தற்போது 70 சதவீத மாகக் குறைந்துள்ளதாக கூறினார்.  மேலும் பொம்மைகளை ஏற்றுமதி செய்வதில் இந்  தியா வல்லரசாக மாறும் சாத்  தியக்கூறுகள் இருப்பதை தாம் ஏற்கனவே கூறியிருப்ப தாகக் கூறிய மோடி, இந்தியா வின் பொம்மைத் துறை  தன்னை மாற்றிக்கொண்டி ருக்கிறது. தனது திறனையும் நிரூபித்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலை யில், இந்தியாவின் பாரம்ப ரிய மருத்துவ முறைகளில் உலகளாவிய ஆர்வம் அதி கரித்து வருகிறது. சமீபத்தில், உலகளா விய ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.10,000 கோடி முத லீட்டுத் திட்டங்கள் பெறப் பட்டுள்ளன என்றார்.