புதுதில்லி, மே 24- இந்தியாவில் எரிபொருள், உணவு தானியம், எண்ணெய், காய்கறிகள், இறைச்சி என அனைத் துப் பொருட்களின் விலைவாசி யும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வு விஷயத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந் தியா நல்ல நிலைமையிலேயே உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அண்மையில் பெருமை பேசியிருந்தனர். அமெரிக்கா, சீனா, ஹாங் ஹாங், பின்லாந்து, ஜெர்மனி, இத் தாலி, நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், நார்வே போன்ற நாடுகளை ஒப்பிட்டால், இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவாகத்தான் உள்ளது என் பதையே அவர்கள் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டி ருந்தனர்.
அதுமட்டுமன்றி, பெட்ரோல், டீசல் உற்பத்தி மீது ஏற்கெனவே உயர்த்திய பல மடங்கு கலால் வரியில் சிறிய அளவில் முறையே லிட்டருக்கு ரூ. 8, ரூ. 6 என குறைத்து விட்டு, ஏதோ அடி யோடு பெட்ரோல், டீசல் விலை யைக் குறைத்து விட்டதாகவும் பாஜக அமைச்சர்கள் தற்போது தம்பட்டம் அடித்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால், இப்போதும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசத்தைக் காட்டிலும் இந்தியா வில் பெட்ரோல் விலை அதிக மாகவே இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தலைநகரான தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 72 காசுகளுக்கு விற் கப்படுகிறது. இந்த விலையோடு ஒப்பிட்டால், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை இப்போ தும் வெறும் 64 ரூபாயாகத்தான் உள்ளது. அதேபோல வங்க தேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய்க்குத்தான் விற்கப்படு கிறது.
அதாவது, இந்தியாவை விட பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 32 ரூபாய் குறைவாக வும், வங்கதேசத்தில் 17 ரூபாய் குறைவாகவும் உள்ளது. இந்தி யாவைக் காட்டிலும் சிறிய பொரு ளாதாரமாக இருந்தும் இவ்விரு நாடுகளும், மக்கள் மீது வரியைச் சுமத்தவில்லை. எனவே, ஒரு லிட்டர் பெட் ரோல் 60 ரூபாய்க்கும் கீழே குறைக்கப்படாத வரை அது கொள்ளை விலைதான் என்று நுகர்வோர்கள் கருதுகின்றனர். உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலாவில் 1 ரூபாய்க்கும் லிபியாவில் 2 ரூபாய்க் கும் ஈரானில் 3 ரூபாய்க்கும் பெட் ரோல் விற்பனை செய்யப்படு கிறது. அதிகபட்சமாக ஹாங் காங்கில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இந்திய மதிப்பில் 218 ரூபா யாகவும், நார்வேயில் 207 ரூபா யாகவும், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் 177 ரூபா யாகவும் பெட்ரோல் விலைகள் உள்ளன.