தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு'
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி மூலம் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் கார்ப்பரேட் நலன் அக்கறையால் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. வேலை கிடைத்தவர்கள் கூட போது மான சம்பளம் இல்லாமல் கடன்கள் வாங்கிச் சமாளிக்கின்றனர். இந்நிலையில், நாட்டில் மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்தி ருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாச மாக்கியுள்ளது. மக்களின் வாழ்க் கையை மேம்படுத்த எந்த முயற்சி யும் எடுக்கப்படவில்லை. அனைத் துக் கொள்கைகளும் முதலாளித் துவ நண்பர்களுக்காக மட்டுமே எடு க்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் சமீ பத்திய அறிக்கை, இந்திய பொருளா தாரத்தின் கவலையளிக்கும் உண் மையை வெளிப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சியில் நாட்டின் மீதான கடன் சுமை உச்சத்தில் உள்ளது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் தனி நபர் கடன் ரூ.90,000 அதிகரித்து ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதில் மட்டுமே 25.7% வருமானம் செல்கிறது. அதிக பட்சமாக 55% கடன்கள் கிரெடிட் கார்டுகள், மொபைல் இஎம்ஐகள் போன்றவற்றுக்குச் செல்கின்றன. அதாவது இந்த பணவீக்கத்தில், குடும்பங்கள் தங்கள் வருமா னத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள் ளனர். பாதுகாப்பற்ற கடன்கள் 25% ஐத் தாண்டிவிட்டன. மிகவும் கவ லைக்குரிய விஷயம் என்னவென் றால், மார்ச் 2025-இன்படி இந்தியா, பிற நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 736.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். நாட்டில், இளைஞர்கள் வேலை யில்லாமல் உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார் கள். பணவீக்கத்தால் மக்கள் சிரமப் படுகிறார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன. மக்கள் கடனில் மூழ்கி வருகின்ற னர். ஆனால், மோடியின் சிறந்த நண்பர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அவர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடி மகனும் ரூ.4,80,000 கடனில் இருப் பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.