states

பிப்.7-ல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி

புதுதில்லி, பிப்.4-  கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 7ஆம் தேதி திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. புதுதில்லியில் வெள்ளியன்று தில்லி பேரிடர் மேலாண்மைக் கழ கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியு ள்ளது. மேலும், முதல்கட்டமாக 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கவும், மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் முறை யிலேயே வகுப்புகளைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தில்லியில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் ரத்து  செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படமாட் டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் 100 சதவீத பணி யாளர்களுடன் செயல்படவும், உடற் பயிற்சிக் கூடங்கள், அழகுநிலையங் கள் செயல்படவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி நடைபெற விருந்த நீட் முதுநிலைத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவ தாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்ச கம் அறிவித்துள்ளது.  2021 ஆம் ஆண்டுக்கான நீட் முது நிலைப் படிப்புக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருவதால் 2022 ஆம் ஆண்டுக்கான நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதாரத் துறை விளக்கம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தேசிய தேர்வு வாரி யத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.  முன்னதாக, தங்களது எம்.பி.பி.எஸ் பயிற்சி முடியாததால் நீட்  முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தள்ளிவைக்க வேண்டும் என எம்பிபிஎஸ் மாணவர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.