புதுதில்லி,பிப்.7- கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஒரே ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்படும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவிக்கை யில், “நாட்டில் கொரோனாவை எதிர்த்துப் போராட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பேருதவியாக அமையும். இந்த தடுப்பூசி தனியாரிடம் மட்டுமே கிடைக்கும். அரசு இதைக் கொள்முதல் செய்யவில்லை” என்று கூறியுள்ளது.