புதுதில்லி, ஜன.10- ரயில்வே துறையை தனியார்மய மாக்குவதற்கு முன்னோட்டமாக ரயில் நிலையங்களை தனியார்மய மாக்குவது, ஒன்றிய அரசின் திட்டங்க ளில் ஒன்றாகும். அதாவது, விமான நிலையங் களை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு குத்தகை விட்டதுபோல, இந்தியா வின் முக்கியமான ரயில் நிலையங் களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையாகும். நாட்டிலேயே முதன்முதலாக போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர ரயில் நிலையம் இவ்வாறு தனி யாருக்கு கொடுக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை சர்வதேச தரத் துக்கு மாற்ற பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் அரசு - தனியார் கூட்டு திட்டத்தின் (PPP) அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது. இவ்வாறு ரயில் நிலையங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறு வனங்கள், அந்த ரயில் நிலையங் களை உலகத் தரத்திற்கு மேம்படுத்து கிறோம் என்ற பெயரில், ரயில் நிலை யங்களிலேயே ஷாப்பிங் மால், உண வகங்கள், பார்க்கிங், சோலார் எனர்ஜி உள்ளிட்ட வசதிகளை ஏற் படுத்துவார்கள்; இதற்கு செல விட்ட தொகையை, ரயில் பயணி களிடமிருந்தே (நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடப்பதுபோல) வசூலித்துக் கொள்வார்கள் என்ப தால், 2017-ஆம் ஆண்டு இதற்கான வேலைகள் துவங்கியபோதே எதிர்ப்பு எழுந்தது. இது தனியார் மயத்திற்கான திட்டம் என்றும், ரயில் பயணிகளிடம் சட்டப்பூர்வமாக கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தற்போது, எதிர்பார்த்தது போலவே, ரயில் நிலைய மேம் பாட்டுக் கட்டணமாக பயணிகளின் டிக்கெட்டில் ரூ.10 முதல் ரூ. 75 வரை கூடுதலாக வசூலிக்க ரயில்வே வாரி யம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் 50-க்கும் மேற் பட்ட ரயில் நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மேம்படுத் தப்பட்ட ரயில் நிலையங்களில் மட் டும்தான் என்றில்லாமல், எதிர் காலத்தில் மேம்படுத்தப்படும் பட்டி யலில் உள்ள ரயில் நிலையங்களி லும் பயணிகளிடமும் இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்துக்கு ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் (Station Development Fee - SDF ) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஏசி வகுப்பில் பய ணிப்போர் ரயில்நிலைய மேம் பாட்டுக் கட்டணமாக ரூ. 50-ம், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்போர் ரூ. 25-ம், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பய ணிப்போர் ரூ. 10-ம் கூடுதல் கட்டண மாக செலுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட ரயில் நிலை யத்தில் இருந்து புறப்படுவதற்கு மட்டுமன்றி, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இறங்குவதற்கும் தனி யாக கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது, 2 நிலையங்களுக்கும் தலா 50 ரூபாய் மேம்பாட்டு நிதி என்ற வகையில் இவர்கள் 100 ரூபாய் அனாமத்தாக செலுத்த வேண்டும். ஆனால், ஏனோ இவர்கள் மீது சற்று இரக்கம் காட்டியுள்ள ரயில்வே நிர்வாகம், 2 மடங்கிற்குப் பதில் ஒன்றரை மடங்கு (75 ரூபாய்) செலுத்தினால் மட்டும் போதும் என்று சலுகை வழங்கியுள்ளது. ஒரு பயணி புறப்படும் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும் பட்டியலில் இல்லாமல், இறங்கும் ரயில்நிலையம் மேம்படுத்தப்படும் பட்டியலில் இருக்கும் பட்சத்தில் அவர்களும் கட்டணம் செலுத்தி யாக வேண்டும். சரி இத்துடன் முடிந்து விட்டதா, என்றால் இல்லை... மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்துவதற்கும் தனியாக ஏற்கெனவே உள்ள கட்டணத்துடன் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியை பயன்படுத் தும் பயணிகளுக்கு மட்டும் ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தொலைதூர ரயில் பயணங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள் ளது. மேற்கு மத்திய ரயில்வேயின் ராணி கமலாபதி நிலையம் மற்றும் மேற்கு ரயில்வேயில் குஜராத் காந்தி நகா் நிலையம் ஆகியவற்றில் மேம் பாட்டுப் பணிகள் முடிந்து, பயன் பாட்டுக்கு வந்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.