இஸ்லாமாபாத்தின் ராணுவ ஸ்தாபனத்திற்கு நெருக்கமானவரும் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான அன்வர் உல் ஹக் கக்கர் இந்து (16/10/24) நாளிதழுக்கு (சுஹாசினி ஹைதருக்கு)பேட்டி அளித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையையொட்டி, அவர் அளித்த நேர்காணல்:
9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திற்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இந்தியாவில் மே 2023 இல் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (SCO) வெளியுறவு அமைச்சர்கள் பலதரப்பு கூட்டத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றார். அத்துடன் நான் இதை இணைத்துப் பார்க்கிறேன். அதுவே பிரதிபலிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது பலதரப்பு நிகழ்வு; இருதரப்பு அல்ல என்பதையும் இரு தரப்பினரும் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அந்த தருணங்கள் வரலாற்றை உருவாக்குகின்றன. சில நேரங்களில் சாதாரண சூழ்நிலைகளில் தீவிர நிலைப்பாட்டை எடுத்த தரப்புகள், சிந்திக்க தவறியவற்றை இணைப்பதற்கு இதுபோன்ற பொது மாநாடுகள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. இது நாடுகளின் மன தில் என்ன உள்ளது, அவர்களின் அரசியல் ஸ்தாபனங்களில் என்ன நடக்கிறது. இதில் பங்கு பெறும் பிற செயல்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை பரஸ்பரம் தெரிந்து கொள்ள உதவுகிறது; அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
குறிப்பாக,2021 ஆம் ஆண்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, உங்கள் கருத்துப்படி பாகிஸ்தான் இராணுவ ஸ்தாபனத்தின் மனதில் என்ன இருக்கிறது?
பதில்: பாகிஸ்தானிய ராணுவ அரசியல் அமைப்பு, சிவில் உரிமைகள், மத அரசியல் அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட எல்லாருமே இந்தி யாவுடன் நல்லுறவை விரும்புகிறார்கள் என நான் நேர்மையாக நம்புகிறேன். இரு தரப்புக்கும் இடையே ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான சமநிலை மற்றும் சமமான உறவுகள் வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
2019-ல் சாலை, ரயில் போக்குவரத்து இணைப்புகளை நிறுத்தியது, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பாகிஸ்தான் தான்.எனவே அவர்கள் தான் முன் கை எடுக்க வேண்டும் என்பது சிலர் வாதம். அந்த முடிவுகள் எல்லாம் தற்போது திரும்பப் பெறப்படும் என நினைக்கிறீர்களா?
பதில்: பாகிஸ்தானின் வெளி உல கத்துடனான பாதுகாப்பு மிக முக்கிய மானது. எந்த அச்சுறுத்தலுக்கும் வெளிப் படையான பதில் இருக்கும். எங்கள் பாது காப்பு கோட்பாடுகளை ஐம்பது ஆண்டு களாக உருவாக்கியுள்ளோம். எங்கள் வழக்கமான திறனை மேம்படுத்தி வரு கிறோம். இது ஒரு எதார்த்தமான எதிர்பார்ப்பு.
இந்தியா பாகிஸ்தான் மக்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்புகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கும் என நினைக்கிறீர்களா?
பதில்: சாமானிய மக்களுக்கிடையே தொடர்புகள் தழைப்பதை யாரும் எதிர்க்க விரும்புவதில்லை. அது நடப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.ஆனால் கடந்த 70 வருடங்களாக உலகின் மேற்கு நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடையே தொடர்பு மேலோங்குவது வியப்பளிக்கிறது . அத னால் நாம் இருவரும் நெருங்கி வந்து விட்டதாக கருத முடியுமா? இருதரப்பிலும் இது குறித்து வேரூன்றிய நிலைகள் இருந்த போதும் மக்களிடையே ஆன உற வுகள் மட்டும் உண்மையில் பிரச்சனை களை தீர்க்க உதவாது. இந்த எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இதை சமாளிப்பதும் பெரும் சவாலாகும் என்பதை நான் உணர்கிறேன். தமிழில்: கடலூர் சுகுமாரன்