states

img

‘இடதுசாரிகள்’ இருந்தால் தான் நமது இந்தியா

எல்டிஎப் தேர்தல் முழக்கம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கேரளத்தில் வெளியிடப்பட்டுள்ள எல்டிஎப் தேர்தல் முழக்கம் குறிப்பிடத்தக்கது. ‘இடதுசாரிகள் இருந்தால்தான் நமது  இந்தியா’ என்பதுதான் அந்த முழக்கம். ‘இடதுசாரிகள் இல்லையென்றால்...’ ஜனநாயகமும் மதச்சார் பின்மையும் மறைந்துவிடும், கார்ப்பரேட்கள் நாட்டை ஆளுவார்கள், என்ற  முழக்கத்துடன், முதல்வரின் படமும் பதாகையில் இடம் பெற்றி ருந்தது. 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் எல்.டி.எப்-பின் தேர்தல்  முழக்கங்கள் மிகவும் ஈர்ப்பாக இருந்தன. 2016இல் ‘எல்.டி.எப் வரும், எல்லாம் சரியாகும்’, 2021இல் ‘நிச்சயம் எல்.டி.எப்’ (உறப்பாணு எல்டிஎப்)  என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. தற்போது நாட்டிற்கு இடதுசாரி களின் முக்கியத்துவம் மிகவும் அவசியமான நேரத்தில், முந்தைய  முழக்கங்களுடன் பொருந்தக்கூடிய வரிகள் இப்போது முன்வைக் கப்பட்டுள்ளன.

சிறப்பிதழ் தொகுப்பு
சி.முருகேசன்
கே.கணேஷ்