states

சங் - பரிவாரங்களின் மிரட்டலுக்கு அடிபணிந்த திரைப்பட தணிக்கை வாரியம்

புதுதில்லி, டிச. 30 - பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில்,  ஜன வரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப் படம் ‘பதான்’. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 3 நிமிட ‘பேஷரம் ரங்’ என்ற  பாடல் டிசம்பர் துவக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரே நாளில் 1 கோடியே 10 லட்சம் ரசிகர்களின் பார்வை களைக் கடந்தது. ஒருவாரத்திற்குள் 6 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. ஆனால், ‘பேஷரம் ரங்’ என்பது ‘வெட்க மற்ற நிறம்’ என்று பொருள்படும் நிலையில்,  இந்த வரிகளைக் கொண்ட பாடலும், அதே நேரத்தில் அந்த பாடலில் நடித்துள்ள தீபிகா  படுகோனே இந்து மதத்தின் நிறமான காவிநிறத்தில் நீச்சலுடை அணிந்திருப்பதும், உடனிருக்கும் ஷாருக்கான் முஸ்லிம்களின் அடையாள நிறமாக பார்க்கப்படும் பச்சை  நிற உடையணிந்திருப்பதும் விமர்சனங் களுக்கு உள்ளாக்கப்பட்டது. சாதுக்கள், சாமி யார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து கொண்டு தீபிகா படுகோனே இப்படி கவர்ச்சியாக ஆடுவது இந்துக்களின் மனத்தை புண்படுத்தி விட்டதாக சங்-பரி வாரங்கள் கொந்தளித்தன. 

“பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக் கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேப ணைக்குரியது. இந்த பாடலானது அசுத்த மான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. “ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் ‘துக்டே துக்டே’ கும்பலை ஆதரித்த நடிகைதான் தீபிகா படுகோனே. எனவே, ‘பேஷ்ரம் ரங்’ பாடலின் காட்சிகள் மற்றும் பாடல்களின் உடைகளை சரி செய்ய  வேண்டும். இல்லையெனில் மத்தியப் பிரதே சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க லாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு  செய்வோம்” என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

‘’பாலி வுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இஸ்லாம் குறித்தோ இறைதூதர் குறித்தோ இப்படி ஒரு  படம் எடுத்தால் நாங்கள் அவரை மதச்சார் பற்ற நபர் என்று கருதுவோம்” என்று ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார். “காவி நிறத்தை தவறாக சித்தரித்துள்ள பதான் திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்த படத்தையுமே பார்க்கக் கூடாது. மேலும் பதான் படத்தில் நடித்தவர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியும், பெண் சாமியாரிணியுமான பிரக்யா சிங்  தாக்கூர் கூறினார். “காவி உடை காட்சி களை மாற்றவில்லை என்றால் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும்” என்றும்மிரட்டினார்.  “காவி நிறத்தில் பிகினி உடை ஏன் அணிய வேண்டும்? பாலிவுட் திரையுலகம் தொடர்ந்து சனாதன தர்மத்தை கிண்டல் செய்து வருகிறது. தீபிகா படுகோனே காவி உடையில் பிகினி அணிந்திருந்தாலும், அவருடன் நடனமாடும் ஷாருக்கான் சனா தன தர்மத்தை தொடர்ந்து எதிர்த்து வரு கிறார். எனவே இந்த திரைப்படம் புறக் கணிக்கப்பட வேண்டும். மீறி திரையிடப்படு மானால் அந்த தியேட்டர்கள் தீயிட்டு கொளுத் தப்பட வேண்டும்” என்று அயோத்தி அனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் வன்மு றையைத் தூண்டினார். தியேட்டர்களுக்கு மட்டுமல்லாமல், இந்த திரைப்படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனையை கொடுக்க வேண்டும் என்றார்.

“ஷாருக்கானின் இந்த படத்தில் காவி யும் இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டி ருந்ததா? என்கிற கேள்விதான் எழுகிறது.  படத்தை தடைசெய்ய நாங்கள் வலி யுறுத்துகிறோம். படம் திரையிடப்பட்டால் அதனை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” என்று இந்து மகாசபை தேசியத் தலைவர் சக்கரபாணி மகாராஜ் கொதித்தார். நடிகையும் பாஜக ஆதரவு எம்.பி.யுமான நவ்நீத் கவுர் ராணாவும் “நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். ஆனால் எங்கள் மத உணர்வுகளுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தணிக்கை வாரி யம் தங்களது பணியை சரியாக செய்ய  வேண்டும். இதுபோன்று மத உணர்வுகளு டன் விளையாடும் காட்சிகள் இருப்பின் அந்த காட்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டும். திரையரங்குகளில் திரையிடப்படும்போது அக்காட்சிகள் இடம்பெற்றிருக்கக்கூடாது. இதனை தணிக்கை வாரியம்தான் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். ‘பேஷரம் ரங்’ பாடலிலுள்ள ஆட்சேப ணைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கூறியது. “ஷாருக் தனது மகளுடன் இந்தப் படத்தைப் பார்த்து, அதை புகைப்படமாக எடுத்து பதிவேற்றி, தனது மகளுடன் இதைப் பார்க்கிறேன் என்று உலகுக்குச் சொல்ல வேண்டும்” என்று பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற சபாநாய கர் கிரீஷ் கவுதம் அநாகரிகமாக பேசினார்.  பெண்களை கடத்தி, பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வெளிநா ட்டில் தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தாவும், ‘காவியின் மகத்துவம்’ குறித்து, பதான் படக்குழுவினருக்குப் பாடம் எடுத்திருந்தார்.

“அந்த காலங்களில் நான் இந்த (காவி) உடையில் ரயிலில் பயணம் செய்யும்போது என்னிடம் எந்த டிக்கெட் பரிசோதகரும் வந்து டிக்கெட் இருக்கிறதா? என்று  கேட்கமாட்டார். நான் 9 ஆண்டுகள் ரயில் பய ணம் செய்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது ஒருமுறை கூட நான் டிக்கெட் எடுத்த தில்லை. பெரும்பாலும் முன்பதிவில்லாத பெட்டியில்தான் பயணித்திருக்கிறேன். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தா லும் என்ன பாபா சாப்பிட்டீங்களா? என்று  கேட்பார்கள். சாப்பிட்டேன் என்றால் சரி என சென்றுவிடுவார்கள். இல்லையென்றால் அவர்கள் சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள். வட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்” என்று கூறியிருந்தார். இவ்வாறு நாடு தழுவிய அளவில் எழுந்த தூண்டுதல்களால், இந்துத்துவா அமைப்பு க்கள், ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தின. தீபிகா  படுகோனே, ஷாருக்கான் மீது காவல்துறை யிலும் புகார் அளிக்கப்பட்டது. மறுபுறத்தில், பதான் திரைப்படத்திற்கு ஆதரவுக் குரல்களும் எழுந்தன. “இந்தூரில் ஷாருக்கானின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் எரித்து வருகிறார்கள்.  பதான் திரைப்படத்திற்கு தடை கோரு கிறார்கள். ஆனால், காவி உடை அணிந்து  பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். சில எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற் கொள்கிறார்கள். காவி உடைஅணிந்த சாமி யார் சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார். இதெல்லாம் பரவாயில்லையா..? ஆனால் ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது மட்டும் தவறா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

செய்தியின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும் ‘ஆல்ட் நியூஸ்’ ‘Alt News’ என்ற  இணையதள செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர், நடிகை தீபிகா படுகோனே காவி அணிந்ததை கேள்விக்கு உள்ளாக்கிய பாஜக ஆதரவு எம்.பி. நவ்நீத் ராணாவின் பழைய தமிழ்ப் பாடல் வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்த தமிழ்ப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற திரைப்பட பாடலில், தற்போது பேட்டியளித்த பாஜக ஆதரவு எம்.பி. நவ்நீத் ராணாவும் காவி உடையில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்து இதுமட்டும் சரியா? என்று ஜூபைர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்ச ராக இருக்கும் ஸ்மிருதி ராணி, முன்பு நடிகையாக இருந்தபோது, ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் காவி உடையில் பங்கேற்ற பழைய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரிஜூ தத்தா வெளியிட்டார். தனது படத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய ஷாருக்கான், “பதான் என்ன  மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேசபக்தி படம். சமூக வலைத் தளங்களில் மோசமான கருத்துக்கள் வலம் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘பேஷரம் ரங்’ பாடல் உள்பட பதான் திரைப்படத்தில் இடம்பெற்றி ருக்கும் பல்வேறு காட்சிகளில் திருத்தங்கள் செய்யுமாறு திரைப்பட தணிக்கை வாரி யமே தற்போது உத்தரவிட்டுள்ளது. பரிந்து ரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து திருத்தப் பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்கும்படி படத் தயாரிப் பாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளது.  திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலை வா் பிரசூன் ஜோஷி வியாழக்கிழமையன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘பதான்’ திரைப்படம் அடுத்த மாதம்  வெளியாவதற்கு முன் வாரியத்தின் நெறி முறைகளுக்கு உள்பட்டு பாடலின் காட்சிகள், வேறு சில காட்சிகளை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தப்பட்ட மாற்றங்கள் செய்து சமர்ப்பிக்க வேண்டும். படத்தை இயக்கியவர்களின் படைப்புத் திற னையும் மக்களின் உணா்வுகளையும் நியாயப் படுத்தி தீா்வு காண இந்த மாற்றம் செய்யப் பட வேண்டும். நமது கலாச்சாரம் மற்றும் கட வுள் நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படாத வகை யில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள் ளார். இதன்மூலம் இந்துத்துவா கூட்டத்தின் மிரட்டலுக்கு, திரைப்பட தணிக்கை வாரிய மும் அடிபணிந்து விட்டதாகவும், இந்தியா வில் படைப்புச் சுதந்திரம் அச்சுறுத்தலில் இருப்பதை தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கை காட்டுவதாகவும் விமர்சனங் கள் முன்னுக்கு வந்துள்ளன.