இஸ்ரேல் - ஹமாஸ் படை இடையே யான மோதலால் இரு பகுதி களிலும் ஆயிரக்கணக்கான மக் கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க விமான சேவையை தொடங்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் புதனன்று அறிவித்தார். அதன்படி வியாழனன்று இஸ்ரேலுக்கான விமான சேவையை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு “ஆபரேஷன் அஜய்” என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு இந்திய விமானப்படை விமானங்களும் பயன் படுத்தப்படும் என்று வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வெளியு றவுத்துறை அமைச்சகம் அறிவித்தபின் 18,000 பேரில் இந்தியா திரும்ப 2,460 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.