states

img

‘கிட்கேட்’ சாக்லேட்களை திரும்பப் பெற்றது நெஸ்லே!

புதுதில்லி, ஜன. 21 - கடவுளர் படங்கள் கவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கிட்கேட் (KitKat) சாக்லேட்டுகளை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தியாவின் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நெஸ்லே. இதன் தயாரிப்பான மில்கிபார், மன்ச், கிட்கேட், மில்க்மெய்ட் உள்ளிட்ட சாக்லேட் வகைகள் பெரியவர்கள் முதல் சிறிய வர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிக்கூடியதாகும்.  இந்நிலையில், கிட்கேட் சாக்லேட் கவரில், இந்துக் கடவுள்களான பூரி ஜகந்நாதர், பாலபத்ரா மற்றும் மாதா  சுபத்ராவின் உருவங்களைப் பொறி த்ததன் மூலம் நெஸ்லே நிறுவனம் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக இந்துத்துவா சக்திகள் சமூகவலைதளத்தில் சர்ச்சை யைக் கிளப்பினர்.  இதையடுத்து, நெஸ்லே நிறுவனம் இப்பிரச்சனை தீவிரம் ஆவதைத் தடுக்கும் விதமாக, உடனடியாக வருத்தம் தெரிவித்ததோடு, கடந்த ஆண்டே சந்தையில் இருந்து குறிப்பிட்ட அந்த கிட்கேட் சாக்லேட் பேக்குகளை திரும்பப் பெற்று விட்டதாக அறிவித்துள்ளது. “மக்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருந் தால், அதற்காக‌ வருத்தப்படு கிறோம்’’ என்று கூறியுள்ளது. மேலும் “கடந்த ஆண்டே சந்தை யில் இருந்து இந்த சாக்லேட் பேக்கு களை நாங்கள் திரும்பப் பெற்று விட்டோம். உங்கள் புரிதலுக்கும் ஆதர வுக்கும் நாங்கள் நன்றி கூறு கிறோம்” என்று தெரிவித்துள்ள நெஸ்லே நிறுவனம், உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவும், அதை கொண்டாடும் விதமாகவுமே சாக்லேட் கவர்களில் படங்களை பொறிக்கிறோம். அந்த அடிப்படை யில்தான், ஒடிசாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பூரி ஜகந்நாதர் போன்ற கடவுளர்களின் படங்களைப் பொறித்தோம் என்று விளக்கமும் அளித்துள்ளது.