states

img

தெற்கு - கிழக்கு மாநிலங்களில் இப்போதும் 50 தொகுதிகளுக்கு திணறும் கட்சிதான் பாஜக!

புதுதில்லி, மார்ச் 16- தென்மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் 50 தொகுதி களைப் பெறுவதற்கு இப்போதும் திணறிக் கொண்டிருக்கும் கட்சி தான் பாஜக என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கிலச் செய்திச் சேனலுக்கு விரிவான பேட்டி ஒன்றை கிஷோர் அளித் துள்ளார். அதில் மேலும் அவர் கூறி யிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலின் முடிவை ஒருபோதும் மாநில தேர்தல் முடிவுகள் தீர்மானிக்காது. இது மற்றவர்களை காட்டிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாக தெரி யும். இதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேசத்தையே கூறலாம். அந்த மாநிலத்தில் 2012-இல் என்ன நடந் தது? சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக நான்காம் இடம் பிடித்தது. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்த லில் உத்தரப் பிரதேசம் பாஜக-வுக்கு கைக்கொடுத்தது.

இதே போல 2002-ஆம் ஆண்டு முதல் என்னால் உதாரணங்களை கூற முடியும்.  நான் 2012-இல் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் சட்டப்பேர வைத் தேர்தலில் பணிபுரிந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டு மானால் நாடாளுமன்றத் தேர்த லுக்கு 2 ஆண்டுகள் இருக்கும் போதே பணியை துவக்கினோம். 2014-இல் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியை பிடிக்க போகிறார் என 2012 காலக்கட்டத்திலேயே அனைவரும் அறிந்திருந்தனர். தற்போதும் அதையே நம்பு கிறார்கள்.  அதேபோல, 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளபோதே தனது வெற்றியை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். ஆனால் 2 ஆண்டுகள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம்.

இதில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம்.  தென்னிந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்களில் மொத்த முள்ள சுமார் 200 தொகுதிகளில், 50 இடங்களில் வெற்றி பெறவே இன்னும் திணறிக் கொண்டிருக் கும் கட்சியாகத்தான் பாஜக இருக் கிறது. அவ்வாறிக்கையில், காங்கி ரஸ் தனது செயல் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி னாலே 2024 தேர்தலில் பாஜக வுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும்.  2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காங்கிரஸ் நினைத்தால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக உரு வெடுக்கலாம். சித்தாந்த ரீதியாக  பாஜகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்தால், 2024 தேர்தலில் காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிச்சயம் பாஜகவுக்கு கடும் சவாலை அளிக்கலாம்.  இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.