states

img

இந்தி ஆதிக்கத்தை திணித்தால் அதுதான் இந்திய ஒற்றுமைக்கு சாவுமணி!

புதுதில்லி, ஏப்.9- “இந்தியாவில், ஆங்கிலத்திற்குப் பதி லாக இந்தியை மக்கள் ஏற்க வேண்டும்; பல்வேறு மாநில மக்களும் தங்களுக்குள் இந்தி மொழியிலேயே பேச வேண்டும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி யிருப்பது, நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. “உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் அழைப்பானது, இந்தியாவின் பன்முகத் தன்மை மீதான தாக்குதல்” என்றும், இந்தி ஏகா திபத்தியத்தை திணிக்கும் அவரது முயற்சியை தடுத்து நிறுத்துவோம்” என்றும் எதிர்க்கட்சிகள் முழங்கியுள்ளன. காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்ச ராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ‘இந்தி அலுவல் மொழிதான்; தேசிய மொழி அல்ல’ என்று கூறியுள்ளார். ஆகவே, இந்தி ஏகாதிபத்தியமே இந்தியாவுக்கு சாவுமணியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் மிகப் பெரிய இந்தி ஆதரவாளன்; ஆனால், அதனை திணிப்பதை ஆதரிக்க மாட்டேன்; அமித்ஷாவோ என் போன்ற வர்களுக்கே இந்தி மொழி குறித்து பிரசங்கம் செய்ய முயற்சிக்கிறார்” என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சாடி யுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் அளித்துள்ள பேட்டியில், “இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அமித் ஷாவும் பாஜகவும் இந்தி பேசாத மாநி லங்களில் அதனைத் திணித்தால் கடுமை யாக எதிர்ப்போம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே  மதம் என்ற பாஜக கொள்கை எடுபடாது. பாசி சம் இதுபோலத்தான் செயல்படும். இந்தித் திணிப்பு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் அடிப்ப டைக்கு மாறாக பாஜக அரசு செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி யை நாட்டின் ஒருங்கிணைந்த மொழியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியைத் திணிக்க முயன்றால், அது தோல்வியில்தான் முடியும் என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரி யும். இந்திதான் தேசியமொழி என்பது போன்ற பார்வை போலி தேசியவாதியான சாவர்க்க ரின் பார்வையாகும். அமித்ஷா கூறியிருப்பது, அவருடைய தாய் மொழிக்கே (குஜராத்தி) செய்த துரோகம்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.