மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீடு மற்றும் அரசு வேலை யில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே (40) கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த உண்ணாவிரதப் போராட் டம் 2 வாரத்தை தாண்டியதால் பதறிய பாஜக கூட்டணி அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக ஒப்புதல் அளித்தது. இதனால் செப்.14 ஆம்தேதி உண்ணாவிரதத்தை கைவிட்ட மனோஜ் ஜராங்கே மராத்தா இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மகாராஷ்டிரா அரசுக்கு 40 நாட்கள் கெடு விதித்தார். அந்த கெடு அக்.24 அன்றுடன் நிறைவடைந்த நிலையில், மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மராத்தா இடஒதுக்கீடு பற்றி சாதா ரண அறிவிப்பை கூட வெளியிடா மல் இருந்தது. இதனால் அக். 25 அன்று அந்தர்வாலி சாரதி கிரா மத்தில் உண்ணாவிரதப் போராட் டத்தை துவங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் 8 நாட்களை கடந் துள்ள நிலையில், புனே உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளன. வன்முறையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-வான பிரகாஷ் சோலங்கியின் வீடும் கொளுத்தப்பட்ட நிலை யில், புதனன்று மாலை முதல் தண் ணீர் கூட குடிக்கப் போவதில்லை என்றும் மனோஜ் ஜராங்கே அறி வித்தார்.
மழுப்பல்
இதனால் அலறிய ஆளும் பாஜக கூட்டணி அரசு மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். மும் பையில் புதனன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் விவாதத்திற்குப் பின் செய்தியா ளர்களிடம் கூறிய முதல்வர் ஏக் நாத் ஷிண்டே,”மராத்தா சமூ கத்துக்கு இடஒதுக்கீடு வழங்கு வதற்கு அனைத்துக் கட்சித் தலை வர்களும் ஆதரவு அளித்துள்ள னர். மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம். மராத்தா இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உட்பட்ட தாக இருக்க வேண்டும். அதே போல மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். இது தொடர் பாக ஆராய ஓய்வுபெற்ற 3 நீதி பதிகள் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. அதற்கு சிறிது காலம் ஆகும். எனவே மராத்தா சமூக மக்கள் அமைதி காக்க வேண்டும். முக்கியமாக சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, அரசின் முயற்சிகளுக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். அர சின் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும்” என மழுப்பலாக கூறி யுள்ளார்.