மும்பை, ஜன.7- கொரோனா மூன்றாவது அலையில் வேக மாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸால் நாடு முழுவதும் ஏராளமான முன்களப்பணியா ளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகா தாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவி்ல் கடந்த வாரம் வரை 20 ஆயிரம் பேர் வரை மட்டும் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100-ஆக அதிகரித்துள் ளது. ஒமைக்ரான் எண்ணிக்கையும் 3 ஆயி ரத்தை கடந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு வியாழக்கிழமை நிலவரப்படி 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரி ழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,836 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களில் 50 பேர் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனை வரும் லேசான அறிகுறிகள் இருந்ததால், வீட்டி லேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 மருத்து வர்கள் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவ மனையில் 38 மருத்துவர்கள் உள்ளிட்ட 45 மருத்துவப் பணியாளர்கள் கடந்த வாரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதனால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களு க்கு அளித்திருந்த குளிர்கால விடுமுறையை உடனடியாக ரத்து செய்து பணிக்கு வர அறிவுறுத்தியது.
சண்டிகரில் பிஜிஐஎம்இஆர் மருத்துவ மனையில் கடந்த பத்து நாட்களில் மருத்து வர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 196 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 3 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் மகாராஷ்டிரம், தில்லி, இராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக் ரானால் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் ஐந்து மாநிலங்கள் ஆகும். இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ள தாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும், சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இதனால் அம்மாநிலத்தில் மருத்துவச் சேவை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன்படி மகாராஷ்டிராவில் 876, தில்லி யில் 465, கர்நாடகத்தில் 333, இராஜஸ்தானில் 291, கேரளாவில் 284, குஜராத்தில் 204, தமிழ் நாட்டில் 121, அரியானாவில் 114, தெலுங்கானா வில் 107 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டா வுடன் ஒப்பிடும்போது ஓமைக்ரான் குறை வான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றி னாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்க ளுக்கு, இது லேசானது என்று அர்த்தமல்ல. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமைக்ரான் மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறது. உயிரிழப்பும் ஏற்படு கிறது என்று தெரிவித்தார்.