புதுதில்லி,டிச.24- தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 358 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் 358 ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெள்ளியன்று மாலை தெரிவித் துள்ளது. 114 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தற்போது 244 பேர் சிகிச்சை யில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.