புதுதில்லி, பிப்.2- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், டேட்டா சென்டர், எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் பிரிவில் சார்ஜிங் இன்ப் ராஸ்டரக்சர், கிரிட் ஸ்கேல் பேட்டரி சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைந்த உள்கட்ட மைப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார். இதன்மூலம், டேட்டா சென்டர், எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம், சார்ஜிங் இன்ப்ராஸ்ட்ரக்சர், கிரிட் ஸ்கேல் பேட்டரி சிஸ்டம் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் டிஜிட்டல் இன்பரா மற்றும் கிளீன் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவில் குறைந்த வட்டியில் நீண்ட காலக் கடன் பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் சேவைகளும், டிஜிட்டல் வாடிக்கையாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர்-க்கான சேவை பெரிய அளவில் அதி கரித்துள்ளது. டேட்டா சென்டர் வர்த்தகத்தில் கவுதம் அதானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோரின் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் குறைந்த வட்டியிலான இந்த நீண்டகால அறிவிப்பும் அவர்களுக்காகவே ஏற்படுத்தப் பட்டதாக மாறியிருக்கிறது. நாட்டின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 76 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் மாபெரும் எனர்ஜி ஸ்டோரேஜ் தொழிற்சாலையை அமைத்து வருகிறார் என்ப தால், பட்ஜெட் அறிவிப்பு மூலம் அவரது நிறுவனமும் குறை வான வட்டியில் நீண்ட காலக் கடனை எளிதாகப் பெற உள்ளது. டேட்டா சென்டர் வர்த்தகத்தில் உலகளவில் மிகப்பெரிய நிறு வனத்தை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள கவுதம் அதானி, ஏற்கெனவே மும்பை, சென்னை, ஹைதராபாத், தில்லி ஆகிய நகரங்களில் டேட்டா சென்டரை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.