புதுதில்லி, ஜூலை 11 - ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், ஆகஸ்ட் 2 முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஜூலை 25-ஆம் தேதிக்குள் மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மனு தாரர் - எதிர்மனுதாரர்களுக்கு உத்தர விட்டுள்ள நீதிபதிகள், அதன்பிறகு ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், 370 ரத்து விவகாரத்தில், அரசியல் சாசனம் தொடர்பான சிக்கல் கள் உள்ளதா என்பதை மட்டுமே விசா ரிப்போம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஜம்மு -காஷ்மீர் குடிமக்களின் அனுமதியின்றி 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியுமா?; இதில் அரசியலமைப்புச் சட்டம் மீறப் பட்டிருக்கிறதா? என்ற விவகாரத்தை மட்டுமே உச்ச நீதிமன்றம் ஆராய உள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை வழங்கும் அரசிய லமைப்பின் 370 மற்றும் 35A பிரிவுகளை நீக்குவது என்று 2019 ஆகஸ்ட் 5 அன்று மோடி அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தது. அத்துடன், ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தை இரண்டு யூனியன் பிரதேசங் களாகப் பிரிக்கும் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டது.
அப்போது, மோடி அரசின் இந்த எதேச்சதிகாரமான முடிவு ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமை களை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 23 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த மனுக்கள் உடனடியாக விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. ஜம்மு - காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்யும், ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் 5 நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று 2019 ஆகஸ்ட் 28 அன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, 2020 மார்ச் 2 அன்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அர சியல் சாசன அமர்வு முன்பு, மனுக்கள் பட்டியலிடவும் பட்டன. ஆனாலும் விசாரணை துவங்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரி காமி, கடந்த 2021-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஜம்மு - காஷ்மீர் தொடர் பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிமன்றத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகும் இரண்டாண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இடையே, தலைமை நீதிபதி யாக என்.வி. ரமணா இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த வழக்கை ஏழு அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட விரிவடைந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டு, பின்னர் அது நிராகரிக்கப்பட்டது. எப்படிப் பார்த்தாலும், இந்த வழக்கு 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு விசாரணைக்கு வரவில்லை. இந்தச் சூழலில்தான், பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து தொட ரப்பட்டுள்ள வழக்குகள், ஜூலை 11 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதி மன்றம் அறிவித்திருந்தது. அதன்படி செவ்வாயன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த அரசியல் சாசன அமர்வு, தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் பிராமாணப் பத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது “ஜம்மு - காஷ்மீரில், 370 ரத்து செய்யப்படாததற்கு முன்பு, 2018-ஆம் ஆண்டில் 52 திட்டமிடப்பட்ட பந்த் சம்பவங்கள் நடந்தன. ஆனால் தற்போது சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், 2023-இல் அது பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. பிரிவினைக்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் முழு நிர்வாகத்தை யும் உள்ளடக்கிய ஆழமான முன்னேற்ற, உறுதியான மற்றும் முற்போக்கான மாற்றங்களை கண்டுள்ளன. அங்கு வளர்ச்சி நட வடிக்கைகள், பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் போன்ற எவ்வித சாதி பாகுபாடுமின்றி ஒவ் வொரு குடிமகன்களுக்கும் சாதகமாக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” என்று ஒன்றிய பாஜக அரசு தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டி ருந்தது. இந்நிலையில், ஆகஸ்டில் துவங்க வுள்ள வழக்கு விசாரணையின்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.