states

img

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரு பைசா கூட தரவில்லை

புதுதில்லி, ஜன.19- கோவிட் தடுப்பு என்ற பெயரில்  மோடி அரசால் தனியாக அமைக்கப் பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒரு  பைசா கூட கோவிட் தடுப்பூசியை உரு வாக்க வழங்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது.    லோகேஷ் பத்ரா என்பவரது  கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தை வெளியிட வேண்டி யிருந்தது. 2020 மே 13 அன்று, கோவிட் பாதுகாப்பிற்காக பிஎம் கேர்ஸ் நிறு வனத்திலிருந்து ரூ.3,100 கோடி ஒதுக்கப் படும் என்று பிரதமர் அலுவலகம் அறி வித்தது.

இதில், முதன்மை அறிவியல் ஆலோசகரின் மேற்பார்வையில் தடுப் பூசியை உருவாக்க ரூ.100 கோடி வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிஎம் கேர்ஸ் நிதியின் விவரங் களைக் கோரி 2021 ஜூலை 16 ஆம் தேதி பத்ரா விண்ணப்பித்துள்ளார். முதலில் தெளிவான பதில் கிடைக்கவில்லை. அடுத்த முறையீடுகளில் தடுப்பூசி யை உருவாக்க நிதி எதுவும் வழங்கப் படவில்லை என்பது தெரியவந்தது. இருப் பினும், ‘பிஎம் கேர்ஸ் நிதி’ என்பது பொதுத் துறை நிறுவனம் அல்ல என்றும் மேலும் விவரங்களுக்குள் செல்ல முடியாது என்றும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறு வழிகளில் பல்லாயிரம் கோடி ரூபாயை பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஒன்றிய அரசு திரட்டியுள்ளது.