2 மாநிலங்களில் வேட்புமனு துவங்கியது
ராய்ப்பூர், அக். 13- 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநி லத்தில் இரண்டு கட்டங் களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் நவம்பர் 7 அன்றும், 2-ஆம் கட்டம் நவம்பர் 17 அன்றும் நடைபெறுகிறது. அதே போல 40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 அன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இந்நிலையில் சத்தீஸ்கர், மிசோரம் மாநி லங்களில் வெள்ளியன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. முதல் கட்டம் நவம்பர் 7 அன்றும், 2-ஆம் கட்டம் நவம்பர் 17 அன்றும் நடைபெறுகிறது. அதே போல 40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 அன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது.
“ஆபரேஷன் அஜய்” 212 பேர் மீட்பு
தில்லி, அக்.13- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான யுத்தம் தீவிரமாகியுள்ள நிலையில் இஸ்ரேலில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்க “ஆப ரேஷன் அஜய்” என்ற திட்டத்தை ஒன்றிய வெளி யுறவுத்துறை அறிவித்தது. இதில் முதல் கட்டமாக 212 இந்தியர்கள் சிறப்பு விமா னம் மூலம் வெள்ளியன்று அதிகாலை தில்லி சர்வதேச விமானநிலையத்தில் இறங்கினர். 212 பேரில் 21 பேர் தமிழர்கள் என்ற நிலை யில், 14 பேர் சென்னைக்கும், 7 பேர் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகநூல், கூகுளுக்கு ‘இந்தியா’ கடிதம்
தில்லி, அக். 13- 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப் உள்ளி ட்ட சமூக வலைத்தளங்கள் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக வாஷி ங்டன் செய்தித்தாள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோ ருக்கு “இந்தியா” கூட்டணி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இன்று நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்
2023-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணமாக வானில் தோன்ற உள்ளது. இந்திய நேரப்படி, சனிக்கிழமையன்று இரவு 08.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை நிகழ உள்ள இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் இது தெரியும். சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
டிபிஐ வளாகத்தில் போராட்டத்திற்கு தடை!
சென்னை,அக்.13- பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வி ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனு மதி கிடையாது என்று பள்ளி கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனு மதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங் கள் நடத்தலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் அக்.13 அன்று போராட்டம் நடத்துவதாக அறிவித் திருந்தது. அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் போராட்டம் திரும்பப் பெற்ற நிலையில், பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது. தற்போது, சென்னை டிபிஐ வளா கத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 3 மாதமாக டெங்கு பாதிப்பு அதிகம்
சென்னை,அக்.13- சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது; இருப்பினும் மக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சமடைய வேண்டாம்; நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகும். வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேர்த்து வைக்கும் ட்ரம், தொட்டி போன்ற வற்றை மூடியே வைக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், மருத்துவ மனை யை அணுக வேண்டும். 3,317 பணி யாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிக்க தொடர் பணி மேற்கொள்ளப் படுகிறது; கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இம்மாதம் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தால் தானாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனை யை அணுக வேண்டும்; ஒவ்வொரு மாதமும் சாலைகளில் திரியும் 600 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரேசன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி
சென்னை, அக்.13- மக்களின் நலன் கருதி ரேசன் கடை களில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த சேவை சென் னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ள நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வசதிக்காக யுபிஐ மூலம் பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ‘மொபைல் முத்தம்மா’ என்ற பெயரில், எப்படி ரொக்கமாக செலுத்தாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேசன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்கு
சென்னை,அக்.13- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் இராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக் குப்பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் இராமேஸ்வர முருகன் 2012-2016 காலகட்டத்தில் கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த் திருப்பதாகப் புகார் வந்துள் ளது. அதனைத் தொடர்ந்து இராமேஸ்வர முருகன் வீடு மற்றும் அவரது உறவினர் கள் வீடு எனப் பல இடங்க ளில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இராமேஸ்வர முருகன், மனைவி அகிலா, தந்தை பழனிசாமி, தாய் மங்கை யர்க்கரசி, மாமனார் அறிவு டைநம்பி, மாமியார் ஆனந்தி உள்ளிட்டவர்களின் பெயர்க ளில் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் முருகனிடம் ரூ.1,98,10,000 மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் அந்த சொத்து மதிப்பு ரூ.6,52,52,000 ஆக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருமானத்திற்கு அதிக மாக 354 விழுக்காடு சொத்து களை குவித்தற்காக இராமேஸ்வர முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
83 மருத்துவ மாணவர் இருக்கை விவகாரம்: ஒன்றிய அரசுக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை,அக்.13- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பு களுக்கான கலந்தாய்வு நடை பெற்று வருகிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு என 15 விழுக்காடு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த ஆண்டை பொறுத்த வரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணா வதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பி லிருந்து ஒன்றிய சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 விழுக் காடு இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை ஒன்றிய சுகாதாரத் துறைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் அனுப்பி உள்ளது.