states

img

2024-இல் பாஜக-வை வீழ்த்துவது சாத்தியமே..!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்

புதுதில்லி, ஜன.25- 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பது இப்போ தும் சாத்தியமான ஒன்றுதான் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிர சாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறவிருக்கும் 5 மாநிலத் தேர்தலில் பாஜகவே வெற்றிபெற்றாலும் கூட, நாடாளு மன்றத் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக என்டிடிவி-க்கு விரிவான பேட்டி ஒன்றை பிரசாந்த் கிஷோர் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2024-இல் பாஜகவை தோற்கடிக்க முடியுமா? என்றால், இதற்கு பதில் அழுத்தமாக ஆம். தோற்கடிக்க முடியும்.  ஐந்து மாநில தேர்தல் முடிவு களை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கத் தேவை யில்லை. இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட 2024- இல் பாஜகவை தோற்கடிக்க முடியும்.  2012 உ.பி. சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. உத்தர கண்ட், மணிப்பூரில் காங்கிரஸும், பஞ்சாபில் அகாலி தளமும் வெற்றி பெற்றன. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வேறு விதமாக இருந்தன.

ஆனால் தற்போதுள்ள கட்சிகள் மற்றும் கூட்டணிகளால், பாஜக-வைத் தோற்கடிக்க முடியுமா, சாத்தியமா? என்றால் இல்லை என்றே கூறுவேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள நம் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை. அதற் குக் காங்கிரஸ் கட்சியை நாம் மறுசீர மைப்பு செய்ய வேண்டும். சித்தாந்த ரீதியாகக் காங்கிரஸ் பலவீனமடைய நாம் அனுமதிக்கக் கூடாது. அது ஜன நாயகத்திற்கு நல்லதல்ல. காங்கிரசின் கொள்கை, எனக்கு ஏற்புடையது. காங் கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி சாத்தி யமே இல்லை. ஆனால், அதற்காக காங்கிரஸ் தலைமையில் தான் எதிர்க் கட்சி அமைய வேண்டும் என்ற நிர்பந்த மும் இல்லை.  உ.பி.யில் பாஜகவை எதிர் கொள்ள வேண்டுமானால், சமூக தளத்தை விரிவுபடுத்துவது இன்றிய மையாதது. அது யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந் தாலும் சரி அல்லது தலித்துகள் அல் லது முன்னேறிய வகுப்பினரை ஒருங் கிணைப்பதாக இருந்தாலும் சரி. இந்துத்துவம், அதீத தேசிய வாதம் மற்றும் பொதுநலன் என வலி மையான தளத்தில் பாஜக தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறது.

இதில், இரண்டு அம்சங்களிலாவது எதிர்க் கட்சிகள் பாஜகவை வீழ்த்த வேண்டும். சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் செயல்பாடு குறைவாக இருப்பதற்கு தேசியவாதம் அங்கு எடுபடாதது ஒரு முக்கிய காரணி யாக உள்ளது. அதே நேரத்தில் தேசி யவாதம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் எந்த இடர்பாடும் இல்லாமல் பாஜகவின் கைதான் ஓங்குகிறது. பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவை எடுத்துக் கொண் டால் - தோராயமாக 200 (மக்களவை) இடங்கள் உள்ளன. பாஜக பிர பலத்தின் உச்சத்தில் இருந்த போது கூட, அங்கு அக்கட்சியால் 50 இடங்க ளையே பெற முடிந்தது. அதற்குப் பதி லாக மற்ற மாநிலங்களிலுள்ள 350 இடங்களை பாஜக முழுமையாக கைப்பற்றியது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். வியூகங்களை மாற்றி அமைத்தால் தான் எதிர்க்கட்சிகள் அதிக இடங்களை வெல்ல முடியும். வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் மேலும் 100 இடங்களை வெல்வதன் மூலம் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமாகும்.” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேட்டி யில் குறிப்பிட்டுள்ளார்.