states

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

புதுதில்லி,ஜன.18- 12 - 14 வயது வரையிலான சிறுவர் களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்து வது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரு கின்ற கொரோனா தொற்றை தடுக்க  மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப் பட்டு வருகின்றன.  இந்தியாவில்  கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இது வரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயி ரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. 15 வயது முதல் 18 வயது வரையி லானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 அன்று தொடங்கி யது. இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரி வித்தார். அவர் கூறுகையில், “12 வயது முதல் 14 வயது வரையிலான சிறு வர்களுக்கு தடுப்பூசி செலுத்து வதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்” என்றார். இந்த நிலையில் இந்த அறி விப்புக்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,  “12 வயது முதல் 14  வயதிலான சிறுவர்களுக்கு இப்போ தைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.