states

img

தெலுங்கானா முதல்வர் கடும் சாடல் நிர்மலா தாக்கல் செய்திருப்பது ஒரு ‘கோல்மால் பட்ஜெட்!’

ஹைதராபாத், பிப்.1- ஒன்றிய பாஜக அரசின் 2022-23 நிதி யாண்டிற்கான பட்ஜெட்டை, “கோல் மால் பட்ஜெட்” என, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கடு மையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், “கோல்மால் பட்ஜெட்”. இந்த பட்ஜெட் சாமானிய மக்களை கடும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. விவசாயிகள் மற்றும் சாமானியர்களுடன், எஸ்.சி.-எஸ்.டி - மற்றும் பி.சி. உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் ஒன்றிய பட்ஜெட் கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏழைகள், தொழி லாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தெளிவின்மையாக இருக்கிறது. நாட்டின் விவசாயம் மற்றும் கைத்தறித் துறைக்கு இந்த பட்ஜெட் ஒரு பெரிய பூஜ்ஜியம். இந்த பட்ஜெட் சிறு வணிகர்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சியை பட்ஜெட் புறக்கணித்துள்ளது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். “வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட் இடம்பெறவில்லை. வார்த்தை ஜால அறிவிப்புகளை தவிர, சொல்லும்படியாக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை”  என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் துள்ளார்.