இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் இசைக்குயில் என்று அழைக்கப்பட்டவருமான லதா மங்கேஷ் கர் (91), இந்தியாவின் மத்திய பிரதேச மாநி லத்தில் உள்ள இந்தூர் என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர், செவந்தி தம்பதியரின் மக ளாக, கடந்த 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி கோமன்டக் மராட்டிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தங்கை ஆஷா போஸ்லே, பாலி வுட்டில் பிரபல பின்னணி பாடகியாக இருக் கிறார். 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி யுள்ள லதா மங்கேஷ்கர், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள்பெற்றவர். மேலும் தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, 4 முறைக்கு மேல் பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். 65 ஆண்டு களைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ளார். லதா மங்கேஷ்கரின் தந்தை கிளாசிக்கல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞராக இருந்த தால், தனது 5வது வயதிலேயே அவரிடம் இசை பயின்றார். பிறகு அமான் அலி கான் சாகிப், அமநாத் கான் ஆகியோரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார். 1942ம் ஆண்டு சினிமா வில் பாடத் தொடங்கிய அவர், முதன்முதலாக ‘கிதி ஹசால்’ என்ற மராத்தி பாடலைப் பாடினார்.
இதே ஆண்டில் அவரது தந்தை இறந்து விட்டதால், குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசை அமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர், ‘மஜ்பூர்’ என்ற படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். இது லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து வெளியான ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் அவருக்கு அதிக புகழைக் கொடுத்தது. 1942 முதல் சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், இசை அமைப்பாளர்கள் அனில் பிஸ்வாஸ், சங்கர் ஜெய்கிஷன், நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், சி.ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவுத்ரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், உஷா கன்னா, ஆர்.டி.பர்மன் என்கிற ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்பட பலரது இசையில் பாடியிருக்கிறார். ‘சஜா’, ‘பைஜு பவ்ரா’, ‘ஆக் ஆஹ்’, ‘ஸ்ரீ 420’, ‘தேவதாஸ்’, ‘கதவு எண் 44’, ‘சோரி சோரி’, ‘முகல் ஆஸம்’, ‘கோஹினூர்’, ‘சோடே நவாப்’, ‘பரஸ்மணி’, ‘பூத் பங்களா’, ‘பட்னி பட்னி’, ‘அபிலாஷா’, ‘கேரவன்’, ‘காதி பதங்’, ‘அமர் பிரேம்’, ‘ஆனந்தி’, ‘சாந்தினி’, ‘லம்ஹே’, ‘தர்’, ‘யேஹ் தில்லகி’, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘ஹை தலாக் தில்’, ‘மொக பத்தீன்’, ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’, ‘சாரா’, ‘தில் சே’, ‘ஒன் 2 க 4’, ‘புகார்’, ‘ஜுபைதா’, ‘ரங் தே பசந்தி’, ‘லகான்’, ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற படங்களில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
1958ல் சலீம் சவுத்ரி இசை அமைத்த ‘மதுமதி’ என்ற படத்தில் அவர் பாடிய ‘‘ஆஜா ரெ பரதேசி’‘ என்ற பாடல், அவருக்கு முதல் பிலிம்பேர் விருது பெற்றுத்தந்தது. பிறகு 1961ல் ஹேமந்த் குமார் இசை அமைத்த ‘பீஸ் சால் பாத்’ என்ற படத்தில் அவர் பாடிய ‘கஹின் தீப் ஜலே கஹின் தில்’ என்ற பாடல் 2வது பிலிம்பேர் விருது பெற்றுத்தந்தது. 1973ல் ஆர்.டி.பர்மன் இசை அமைத்த ‘பரிஜாய்’ என்ற படத்தில் அவர் பாடிய ‘பீட்டி நா பிடாய் ரெய்னா’ என்ற பாடல், சிறந்த பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருது பெற்றுத்தந்தது. லதா மங்கேஷ்கருக்கு 1969ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 1974ல் உலக அளவில் அதிக பாடல்களைப் பாடிய தற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். 1975ல் ‘ரூதே ரூதே பியா’ (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப் பட்டது. 1989ல் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1990ல் ‘யாரா சீலி சீலி’ (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
1993ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனை யாளர் விருது, 1996ல் ஸ்டார் ஸ்கிரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது, 1997ல் ராஜீவ் காந்தி விருது, 1999ல் பத்ம விபூஷண் விருது, 1999ல் என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனை யாளருக்கான ஜீ சினிமா விருது, 2000-ல் லண்ட னில் உள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாத னையாளர் விருது, 2001-ல் ஹீரோ ஹோண்டா மற்றும் ஸ்டார் டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னணி பாடகிக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது. 2001-ல் நூர்ஜஹான் விருது, மகாராஷ்டிரா ரத்னா விருது, பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. ‘ஆஜா ரெ பர்தேசி’ (மதுமதி), ‘கஹி தீப் ஜலே கஹி தில்’ (பீஸ் சால் பாத்), ‘தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி’ (க்ஹண்ட), ‘ஆப் முஜிகே அசே லக்னே லகே’ (ஜீனே கி ராஹ்), ‘தீதி தேரா தீவார் தீவானா’ (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன்) போன்ற பாடல்களுக்காக பிலிம் பேர் விருது பெற்ற லதா மங்கேஷ்கர், பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் கழக விருதும் பெற்றுள்ளார். லதா மங்கேஷ்கர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1961ல் பஜனை பாடல்கள் அடங்கிய ‘அல்லாஹ் தேரா நாம்’, ‘பிரபு தேரா நாம்’ ஆகிய ஆல்பங்களை வெளியிட்ட லதா மங்கேஷ்கர், 1974ல் ‘மீராபாய் பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, ‘உத் ஜா ரெ காக’, 2007ல் ‘சாத்கி’, 2012ல் எல்.எம் என்ற சொந்தப் பெயரில் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
1970களின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப் புற இசையில் ஒரு ஆல்பம், சாந் துக்காராம் பற்றிய ‘அபாங்க்ஸ்’ என்ற ஆல்பம் குறிப் பிடத்தக்கவை. பின்னணி பாடகியாக மட்டு மின்றி இசை அமைப்பாளராகவும், தயாரிப்பா ளராகவும் திறம்பட பணியாற்றி இருக்கிறார் லதா மங்கேஷ்கர். 1953ல் ‘வாடல்’ என்ற மராத்தி மொழி படத்தை தயாரித்து வெளியிட்டார். அதே ஆண்டில் சி.ராமச்சந்திராவுடன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955), ‘லேகின்’ (1990) ஆகிய இந்தி படங்களை வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநில அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ‘சதி மானசே’ என்ற படத்துக்காகப் பெற்றார். ‘ஐராநிச்ய தேவா துலா’ என்ற பாடலுக்காக சிறந்த பாடகிக் கான விருது பெற்றார். 1960ல் ‘ராம் ராம் பவ்ஹான’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான லதா மங்கே ஷ்கர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’, ‘தம்படி மதி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
1999ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட லதா மங்கேஷ்கருக்கு 2001-ல் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 2001-ல் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் என்ற மருத்துவமனையை புனேவில் நிறுவிய அவர், கடைசிவரை திரு மணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அறிமுகமான லதா மங்கேஷ்கர்
1955ல் திலீப் குமார் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இதில் இடம்பெற்ற 9 பாடல்களையும் லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி பாடியிருந்தனர். பிறகு இப்படம் ‘வான ரதம்’ என்ற டைட்டி லில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ என்று கம்பதாசன் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கர் பாட, அதற்கு நவ்ஷாத் இசை அமைத் திருந்தார். 1952ல் இந்தியில் வெளியான ‘ஆண்’ என்ற படம், ‘ஆண் முரட்டு அடியாள்’ என்ற டைட்டிலில் தமிழில் டப்பிங் செய்து வெளி யிடப்பட்டது. இதில் ‘இழந்தேன் உன்னை அன்பே’, ‘நகரு நகரு’, ‘பாடு சிங்கார பாடலை’, ‘இன்று எந்தன் நெஞ்சில்’ ஆகிய பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். இந்தப் படத்துக்கும் நவ்ஷாத் இசை அமைக்க, கம்பதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.
லதா மங்கேஷ்கரை மீட்டு வந்த இளையராஜா
1956ம் ஆண்டுக்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987ல் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்துக்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இதில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை அவர் பாடினார். இதுதான் லதா மங்கேஷ்கர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ்ப் பாடல். பிறகு 1988ல் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார். தொடர்ந்து கார்த்திக் நடித்த ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், பிறகு சோலோவாகவும் பாடியிருந்தார். இப்படத்துக்கும் இளையராஜா இசை அமைத்திருந்தார். 2006ல் இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ என்ற படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘லூகா சூப்பி’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடினார் லதா மங்கேஷ்கர்.