புதுதில்லி, ஜூன் 1- 500 ரூபாய் கள்ளநோட்டுப் புழக்கம் அதிகரித்து விட்டதால், கூடுதல் பாது காப்பு அம்சங்களுடன் புதிதாக 500 ரூபாய் நோட்டை அச்சிடுவது என்று மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2016 நவம்பர் 8 அன்று, அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பணமதிப்பு நீக்கம் செய்து விட்டு, புதிதாக 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி அறிமுகப் படுத்தினார். இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுப் புழக்கம், கறுப்புப் பணத்திற்கு முடிவுகட்டி விட்டதாக பிரதமர் மோடி கூறி னார்.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே புதிதாக அறிமுகப்படுத்த 500 ரூபாய், 2000 ரூபாய் வடிவிலான கள்ள நோட்டுக்கள் தாரா ளமாக புழக்கத்திற்கு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இது படிப்படி யாக அதிகரித்து, தற்போது நாட்டில் பிடி படும் கள்ள ரூபாய் நோட்டுக்களில், பிரதமர் மோடியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களே அதிகம் என்றாகி விட்டது. “2021-ஆம் ஆண்டு வங்கிகளால் கண்டு பிடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டு களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 453 ஆக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் இரு மடங்காக அதிகரித்து, அதாவது 101.9 சத விகிதம் உயர்ந்து 70 ஆயிரத்து 666 நோட்டுக் கள் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி அண்மையில் தனது ஆண்டறிக்கையிலேயே குறிப்பிட்டிருந் தது. இது பிரதமர் மோடியின் 2016-ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியது. இதற்குத்தான் பிரதமர் மோடி, 130 கோடி மக்களையும் வதைத்தாரா? என்று எதிர்க்கட்சிகள் கண்ட னங்களை தெரிவித்து வந்தன. இந்நிலையில், இந்த விமர்சனங்களை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் நோட்டுகளில் தற்போது மாற்றம் கொண்டு வர மோடி அரசு தீர்மானித்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த புதிய ரூபாய் நோட்டுக் கான காகிதங்கள், மை போன்றவற்றை அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய் யும் பணிகளில் ரிசர்வ் வங்கி இறங்கியிருப்ப தாகவும் கூறப்படுகிறது. 2000 ரூபாய் கள்ளநோட்டுப் புழக்கமும் 50 சதவிகிதம் அதிகரித்து இருந்தாலும், அவற்றைப் புதிதாக அச்சிடுவதில்லை என் பதால், அதனை தவிர்த்து விட்டு, 500 ரூபாய் நோட்டுக்களை மட்டும் கூடுதல் பாது காப்பு அம்சங்களுடன் புதிதாக அச்சிடுவது என்று மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.