states

‘தமிழகத்தில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும்’

புதுதில்லி,பிப்.11- தமிழ்நாட்டில் 890 புதிய  இயற்கை எரிவாயு நிலை யங்கள் அமைக்கப்பட உள்ள தாக ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. நாடாளுமன்ற மக்கள வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய  பெட்ரோலியம் -இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப் பூர்வமாகப் பதி லளித்தார். அதில், “ஆங்கி லத்தில் சிஎன்ஜி என்று அழைக்கப்படும் அழுத்த மூட்டப்பட்ட இயற்கை  எரி வாயுவுக்கான நிலையங் களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்தால் அங்கீக ரிக்கப்பட்ட  மாநகர எரிவாயு விநியோக அமைப்புகள் நிறுவி வருகின்றன. அரசுக்கு பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பா ய்வு மையம் வழங்கியுள்ள தகவலின் படி, 2019-20 ஆம் நிதியாண்டில் 4632 எம் எம் எஸ் சி எம் அழுத்தமூட்டப் பட்ட இயற்கை எரிவாயுவும், 2020-21 ஆம் நிதியாண்டில் 3678 எம் எம் எஸ் சி எம்  அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும், 2021-22 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை  2462 எம் எம் எஸ் சி எம்  அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 3,628 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன; இதில் தமிழகத்தில் 68 உள்ளன.விரைவில்  நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 890 நிலையங்களை நிறுவத்  திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.