states

img

ஒன்றிய பாஜக  அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை

ஒன்றிய பாஜக  அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதியாக அங்கன்வாடி மையங்களும் தனியார்மயமாக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஹரியானாவில் பாஜக அரசு இதை செயல்படுத்த முயற்சிக்கிறது. “பிளே ஸ்கூல்” என்ற பெயரில் அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக்கும் ஹரியானா அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த 20 நாட்களாக எழுச்சிமிகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சண்டிகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்.