states

img

15 இந்திய மாலுமிகளை மீட்க விரைந்த கடற்படை

புதுதில்லி, ஜன. 5 - அரபிக்கடலில் சோமா லியாவின் கடற்கரை அருகே ஐந்து முதல் ஆறு அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்களால் வியாழக்கிழமை மாலை எம்.வி. லிலா நோர்போல்க் (MV Lila Norfolk) என்ற கப்பல் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் குறைந் தது 15 இந்திய மாலுமிகள் இருப்பதாக இந்திய கடற் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லைபீரி யக் கொடியுடன் கூடிய  அந்த வணிகக் கப்பலில்  இருக்கும் 15 இந்திய மாலு மிகளை மீட்பதற்காக இந்தி யாவின் கடற்படைக்கப்பல் ‘ஐ.என்.எஸ் சென்னை’ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட கப்பலின்  நிலைமையை போர் விமா னங்கள் மூலம் உன்னிப் பாகக் கண்காணித்து வருவ தாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு வந்த எண்ணெய் டேங்கர் கப்பல்  மீது அரேபிய கடல் பகுதி யில் தாக்குதல் நடந்தபிறகு இந்திய கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் கண் காணிப்பை தீவிரப்படுத்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது.