states

img

நாடு முழுவதும் 51 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

புதுதில்லி, செப். 27 - தேசிய புலனாய்வு முகமையானது, (NIA) புதன்கிழமையன்று நாடு முழுவதும்  51 இடங்களில் சோதனைமேற்கொண்டது. கனடாவைத் தளமாகக் கொண்டு  செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதி கள், ஆதரவாளர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோரை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, பயங்கரவாதம் - குண்டர் நடவடிக்கை- கடத்தல்காரர்களுடன் தொடர்பு என 6 மாநிலங்களில் மூன்று தனித்தனி வழக்குகளில் தொடர்புடைய லாரன்ஸ், பாம்பிஹாவின், அர்ஷ் டல்லா கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களை இலக்கு வைத்து சோதனை நடைபெற்றது. பஞ்சாபில் 30 இடங்களிலும், ராஜஸ்தா னில் 13 இடங்களிலும், ஹரியானாவில் 4  இடங்களிலும், உத்தரகண்டில் 2 இடங்களி லும், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனைநடந்தது. உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங்  நகர் பாஜ்பூர் காவல்நிலைய பகுதியில்  உள்ள துப்பாக்கி விற்பனை கடையிலும்,  டேராடூன் மாவட்டத்தில் உள்ள கிளமென்ட வுன் காவல் நிலையப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தியது. முன்னதாக செப்டம்பர் 21 அன்று, தப்பியோடிய கும்பலான கோல்டி பிராரு டன் தொடர்புடைய பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.